சேனா. இ-ள் :1‘மீனொடு பெயரும் யாணரூர’ (நற். 210) எனயாணர் என்பது வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : யாணர் என்னுஞ் சொல் புதியது படுதல் என்னும் பொருண்மையை யுடைத்து, எ-று. உ-ம் : 2‘வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும் யாணரூர’ (நற். 210) நாடொறும் புதியது படுகின்றவூர். நச் இதுவுமது. இ-ள் : யாணர்க்கிளவி புதிது படற் - பொருட்டே யாணர் என்னும் சொல் வருவாய் புதிதாகப் படுதலாகிய குறிப்பையுடைத்து, எ-று. உ-ம் : ‘வீகொடு சென்ற வட்டிற் பற்பல மீனொடு பெயரும் யாணரூர’ (நற். 130). எனவரும். வெள். இ-ள் : யாணர் என்பது, வருவாய் புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘மீனொடு பெயரும் யாணரூர’ எனவரும். ஆதி. பொருள் :யாணர் ............ புதிதான. அமர்தல் |