139

சேனா

(அமர்தல் மேவல், யாணுக்கவினாம்)

இ-ள் : ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84)   எனவும்,
‘யாணது  பசலை’ (நற். 50) எனவும் அமர்தலும் யாணும் முறையானே
மேவுதலும் கவினுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் :யாணு என்னுஞ்சொல்  கவின்  என்பதன்  பொருள்படும்,
எ-று.

உ-ம் : யாணு   விசும்பின்   அமர  ருளப்படப்  பேணிப்பேணிப்
பெரிதெனைப் பெட்டபின்- அழகிய விசும்பு என்றவாறு.

நச்.

இதுவுமது.

இ-ள் : யாணுக்கவின் ஆகும் - யாண் என்னும் சொல் கவினாகிய
குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் :யாணது பசலை என்றனன் (நற். 50)

வெள்

(அமர்தல் மேவல், யாணுக் கவினாகும்)

இ-ள் : அமர்தல்    என்னும்    சொல்    மேவுதல்   என்னும்
குறிப்புணர்த்தும்;    யாணு   என்னுஞ்   சொல்   கவின்   என்னும்
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’, என அமர்தல் மேவுதல்
என்னும்  குறிப்புணர்த்தியது.  ‘யாணது  பசலை’  என யாணு என்பது
கவின் என்னும் குறிப்புணர்த்தியது.

ஆதி

பொருள் : யாண்.........அழகு.

பரவு, பழிச்சு
 

376.

பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள        (85)  
 

ஆ. மொ. இல.

‘Paravu and Palichchu’ give the sense of worship,

ஆல்.

‘Paravu’ and ‘Paliccu’ mean worship.