145

‘கடு நட்பு’ எனச் சிறப்பும்,
‘கடியையால் நெடுந்தகை செருவத்தானே’ என அச்சமும்,
‘கொடுஞ்சுழிப் புகா   அர்த் தெய்வ நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவன்   நினக்கே’ என முன்தேற்றும் 

பற்றிக் கடி என்னும் உரிச்சொல் வந்தவாறு காண்க.

ஆதி

பொருள் : கடி-கடித்தல்-விரைவு  முதலிய  பத்துப் பொருள்களில்
வரும்.
 

378.

ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே              (87)

(ஐயமுங் கரிப்பும் ஆகலும் உரித்தே)
 

ஆ. மொ. இல.

‘Doubt’ and ‘pungency’ also may be denoted by it.

ஆல்.

It may also mean doubt and pangency.

பி. இ. நூ

நேமி. சொ. 57

கரிப்பு ஐயம்....கடி சொற்றிறம்.

நன். 457

கடி... கரிப்பின் ஆகும்.

இல. வி. 282.

ஐயமும் கரிப்பும்... அறைதலும்

இளம்

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ   வெனின்,   இவ்விரு  பொருளும்
படுதற்கும் உரித்து, எ-று.

வ-று : 1‘கடுத்தன    ளல்லளோ     வன்னை’   என்றக்கால்,
ஐயுற்றனள் என்பதாம்.

       2‘கடிமிளகு  தின்ற  கல்லா  மந்தி’ என்றக்கால், கரிப்பு
ஆர் மிளகு தின்ற என்பதாம்.

சேனா

இ-ள் : ‘கடுத்தனள்  அல்லளோ  வன்னை’  (ஐங்.  194) எனவும்,
‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ எனவும், கடியென்


பொருள் : 1. அன்னையானவள் ஐயப்பட்டாள்   அல்லளோ

            2. கரிப்புடைய மிளகு   தின்ற கல்லாக் குரங்கு