இளம் வ-று : ‘ஐதே காமம் யானே’ (நற். 143)என்றக்கால். வியக்கத்தக்கது என்பதாம். சேனா. இ-ள் : (சூ. 379, 380, 381, 382 எண்களுள்ளவற்றுக்குச் சேர்த்து 382ல் உரை எழுதப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்க) தெய். இ-ள் : ஐ என்பது வியப்பு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘ஐ யென விம்மி யவற்கது கூறிய பொய்யில் புகழோன் புகழடி கைகூப்பி’ - வியப்பு என்றது விம்மி என்றவாறு. நச். இது குறிப்பு. இ-ள் : ஐ வியப்பு ஆகும் - ஐ வியப்பாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘ஐதே காமம் யானே’ (குறுந். 217) வெள் இ-ள் : (சூ. 382-ல் காண்க), ஆதி. பொருள் : ஐ - ஐந்து, அழகு - வியப்பு. முனைவு |