ஆ. மொ. இல. If taught clearly, there will be no confusion in knowing the meaning of the word. ஆல் : The meaning will not get confused if the listener gets the sense of the speaker. பி. இ. நூ. இல. வி. 292 பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின் இளம் இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுமேற் சூத்திரத்திற்குப் புறனடை. உரை : உரிச்சொல் பிறிதலது, அது பொருள் உணருமாறு வல்லாற்குப் பிற சொற் கொணர்ந்து பொருள் உணர்த்தல் வேண்டா; திரிபின்றி அச் சொல்லினானே உணரப்படும், எ-று. என்னை? உறு என்ற பதம் மிகுதிப் பொருட்கு என்றக்கால், அம் மிகுதியையும் அதனானே யுணரலாம்; உணருமாறு வல்லாற்குப் பிற சொற் கொணர்ந்து உரைத்தல் வேண்டா என்பது. சேனா. இ-ள் : ‘உறுகால்’ (நற். 37) என்புழி உறு என்னும் சொற்குப் பொருளாகிய மிகுதி என்பதன் பொருளும் அறியாத மடவோனாயின், அவ்வாறு ஒரு பொருட் கிளவி கொணர்ந்துணர்த்த லுறாது’கடுங்காலது வலி கண்டாய், ஈண்டு உறு என்பதற்குப் பொருள்’ என்று தொடர் மொழி கூறியானும், கடுங்கால் உள் வழிக் காட்டியானும் அம்மாணாக்கன் உணரும் வாயிலறிந்து உணர்தல் வல்லனாயின் அப்பொருள் திரிவு படாமல் அவன் உணரும், எ-று. அவற்றானும் உணர்தலாற்றாதானை யுணர்த்துமாறு என்னையெனின், அதற்கென்றேவருஞ்சூத்திரம்எழுந்ததென்பது. |