169

ஆதி.

எழுத்துகளாகப் பிரிந்து (பகுபதமாக்கிப்) பார்த்தல்  உரிச்சொல்லில்
கிடையாது.

கெடவரல்- கெட+வரல் எனப் பிரித்துப் பார்த்தல் ஆகாது.

எய்யாமை - அறியாமையாயின், எய்- அறி எனப் பிரித்துப் பொருள்
கோடல் ஆகாது.

ஆகலின்   உரிச்சொற்களை   அவ்வாறே   பொருள்   உணர்தல்
வேண்டும். இஃதும் அவற்றின் தனியுரிமை.

உரியியற்புறனடை
 

390.

அன்ன பிறவுங் கிளந்த வல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉ
முரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட
வியன்ற மருங்கி னினைத்தென வறியும்
வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்
தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற்
பாங்குற வுணர்தலென்மனார் புலவர்.           (99)

(அன்ன பிறவும் கிளந்த அல்ல
பல்முறை யானும் பரந்தன வரூஉ-ம்
உரிச்சொல் எல்லாம் பொருள்குறை கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
வரம்பு தனக்கு இன்மையின் வழிநனி கடைப்பிடித்து
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்
பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.)
 

ஆ. மொ. இல.

Such others  not   discussed  here  may      occur 
extensively in a different way.

If we try to  include  them    all  in  this  discussion
and give their meanings there  would be no limit.

Following the way  of  tradition  and  having  what
have been said by way  of command  to preserve
the  tradition in mind, one should understand them
clearly so say the scholars.