ஆல். Scholars tell us that since it is not possible to draw a line of limitation to the semanties of these and other free morphemes which are extensive in the various ways and since it is not what we aim at either, one must come to understand them clearly by following the right method according to what is said in the body of rules which are the safeguards. பி. இ. நூ. இல. வி. 290 அன்ன பிறவும் ...... ....... என்மனார் புலவர் (தொல்காப்பியச் சூத்திரமே). இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் ஒரு புறனடை. உரை :அச்சொல்லிப் போந்த உரிச்சொற்களன்றி அவை போல்வன பிறவும் உலகத்துப் பலவற்றானும் பரந்துவரும் உரிச்சொல் எல்லாவற்றையும் இசையும் குறிப்பும் பண்பும் என்னும் மூன்று வகைப்பட்ட பொருளையும் சார்த்தி யுணர்த்துதற் குறை கூட்ட அம்மூன்று பொருண்மைக் கண்ணும் அவை யித்துணையே என்று வரையறுக்கும் வரையறை யின்மையின் முன்னர் உரிச்சொற்கு ஓதப்பட்ட இலக்கணத்திற் பிழையாமல் ஓம்படை யாணையிற் கிளந்தவற்றியலான் உணர்க, எ-று. ஓம்படையாணை என்பது பாதுகாவல் பற்றிய ஆணை. அருமை இருமை கருமை சேண்மை என்னுந் தொடக்கத்தன வற்றைப் பிற நூலார், ‘இருமை பெருமையும் கருமையும் செய்யும்’ என்றும், ‘தொன்றென் கிளவி தொழிற் பயில் வாகும்’ என்றும் எடுத்தோதுப என்பதும் அது. எட்டாவது உரியியல் முற்றிற்று. சேனா. இ-ள் : ‘அன்ன பிறவும் கிளந்த வல்ல பன்முறையானும் பாரந்தன வரூஉ-ம் உரிச்சொல் எல்லாம்’ என்பது, சொல்லப் பட்டனவே யன்றி அவை போல்வன பிறவும் பலவற்றானும் பரந்து வரும் உரிச்சொல் எல்லாம், எ-று. |