தொல்காப்பியம் சொல்லதிகாரம் (உரைவளம்) 1உரியியல் இளம்பூரணர் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உரிச்சொல் உணர்த்தினமையின் உரிச்சொல் ஒத்து என்னும் பெயர்த்து. சேனாவரையர் நிறுத்த முறையானே உரிச்சொல்லுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனான் இவ்வோத்து உரியியல் என்னும் பெயர்த்தாயிற்று. தமக்கியல்பில்லா விடைச்சொற்போலாது இசை, குறிப்பு, பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மையும் செய்யுட்குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென்பாருமுளர். தெய்வச்சிலையார் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், உரிச்சொல் ஒத்து என்னும் பெயர்த்து; உரிச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். உரிச்சொல் என்பது யாதோவெனின், ஒருவாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானேயன்றே, ஒருசொற் பலபொருட்குரிமை தோன்றினும், பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர்.
1.உரிச்சொல்லியல் பாடம். (நச்.) |