உண்மைப் பொருள் மாறி வரும், ஒரு சொல் பல பொருள் தந்தும் பல சொல் ஒரு பொருள் தந்தும் வரும்; செய்யாததைச் செய்ததுபோல் கற்பிக்கும்; இஃது மரபு தழுவிப் பயிலப் பெற்று எல்லாச் சொற்களும் வேறு பொருள் தந்து நிற்கும். இயம்பல்-சொல்லுதல் அதிர்வு-முழக்கம் சிலைத்தல்-ஒலித்தல் முரஞ்சல்-ஒலித்தல் இவை ஒலி பற்றி வருவன. ஆயின் பிற உரிப் பொருள் தருவன பின்னர்க் காண்போம். விறப்பு-அச்சம், உறப்பு-கிள்ளியெடுத்தல் அலமரல்-அங்கலாய்த்தல்-இவை குறிப்பு. ஆயின் பிற பொருள் தரும். கறுப்பு-கருமை, சிவப்பு-செம்மை, சிறுமை-சிறிய, செழுமை-செழிப்பு- இவை பண்பு பற்றியவை; பிற பொருள் தரும். பெயர்ச் சொல் மாறிவரல்: பிணைமான், (உரி) விருப்பமான வம்பு-அக்கிரமம் (உரி) நிலையில்லா வாள்-கத்தி (உரி) நெளிபெற்ற வினைச்சொல் மாறிவரல்; வைதிட்டு (உரி) கூர்மை விழு-விழுதல் (உரி) சிறந்த வீழ்-விழுதல் (உரி) விரும்புகிற கடி-கடிக்கின்ற (உரி) காவல் பெற்ற ஒரு சொல் பல பொருள் தரல்: கடி-காவல், மணம், நீக்கு, கூர்மை, அச்சம், விளக்கம், புதுமை. பல சொல் ஒரு பொருள் தரல்: சால, உறு, தவ, நனி, கூர், கழி-மிகுதி. பயிலாதவற்றைப் பயின்றதாக்கல்: இப்பாதை மதுரைக்குப் போகிறது. பாதை போகவில்லை; நீளக் கிடக்கிறது; அதனைப் போவதாகச் சொல்வது உரிச் சொல். அதனைப் பயிலும் சொல்லோடு சேர்த்தல். நாகுஇளங்கன்று மழகளிறு-மரபன்று |