25

சேனா.

இ-ள் : ‘உருகெழு  கடவுள்’  எனவும்,  ‘புரைய  மன்ற புரையோர்
கேண்மை’  (நற்.  1)  எனவும்  உருவும்  புரையும்  உட்கும் உயர்பும்
உணர்த்தும், எ-று.

தெய்.

(உருவுட்காகும்)

இ-ள் : உரு என்னுஞ்சொல் உட்கு என்பதன் பொருள்படும்,எ-று.

உ-ம் : உருகெழு கடவுள்; உட்குமிக்க கடவுள் என்றவாறு.

(புரையுயர்பாகும்)

இ-ள் : புரை என்பது உயர்வு என்னும் பொருள்படும், எ-று.

உ-ம் : புரையமன்ற புரையோர் கேண்மை (நற்1.)

நச்.

இதுவுமது.  

இ-ள் :  உரு  உட்கு  ஆகும்  உரு  என்னுஞ்  சொல் உட்குதல்
என்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருட்டாம்,  புரை உயர்வு ஆகும்
புரை என்னும் உரிச்சொல் உயர்வு என்னும்  உரிச்சொல்லது  குறிப்புப்
பொருட்டாம், எ-று.

உ-ம் : ‘உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த’     (புறம். 160)

‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற். 1)  

என வரும்.  

‘உருவக் குதிரை மழவர் ஓட்டிய’ (அகம்.1 )
‘உருவமென் றுரைத்தி யாயின்’ (சீவக. 1585)  

என உரு வடிவழகையும்,

‘புரை தீர் கேள்விப் புலவரான’  

எனப்    புரை   குற்றத்தையும்   உணர்த்துதல்,   ‘கூறிய   கிளவிப்
பொருள்நிலை யல்ல (உரி. 92) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க.