29

2‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கம்’
                                 (மலை படு. 374)

என்றவிடத்தும் அதுவாம்.

சேனா

இ-ள் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22)
எனவும்,  ‘வெயில்  புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கத்து’ (மலைபடு. 374)
எனவும்     செல்லலும்     இன்னலும்,     இன்னாமையென்னும்
குறிப்புணர்த்தும், எ-று.

தெய்

இ-ள் :  செல்லல் என்னும் சொல்லும் இன்னல் என்னும் சொல்லும்
இன்னாமைப் பொருளில் வரும், எ-று.

உ-ம் :  ‘மணங்கமழ்  வியன்மார் பணங்கிய செல்லல்’  ‘வெயில்
புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து’

நச்

இது, குறிப்பு

இ-ள் : செல்லல் இன்னல் இன்னாமையே செல்லலும்

இன்னலும் இன்னாமை என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம் 22)

          ‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கத்து’ (மலைபடு. 374)

என வரும்.

வெள்

இது குறிப்பு பற்றிவரும் உரிச்சொல் உணர்த்துகின்றது.

இ-ள் : செல்லல் இன்னல்  என்னும்  உரிச்சொற்கள் இன்னாமை
யென்னும் குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’
          ‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கத்து’


2. பொருள் : குளிர்ச்சி    வாராமல்   வெயில்   பாதுகாக்கும்
இன்னாமை   செய்யும்   வழியிடத்தில்   போம்
பொழுது.