ஆ.மொ.இல. ‘Mallal’ means fertility; ‘Ē’ means abundance ஆல். ‘Mallal’ means fertilit and ‘E’ means abundance பி. இ. நூ. நேமி. சொ. 58 ஏ ஏற்றம் மல்லல் வளமை முத்து. ஒ. 30 மல்லல் வளனே ஏ பெற்றாகும். இளம் வ-று : ‘மல்லல் மாமலை. என்றக்கால் வளனுடைய பாமலை என்பதாம். ‘ஏகலடுக்கம்’ (நற். 116) என்றக்கால் 4பெற்றிய கல்லடுக்கம் என்பதாம். சேனா இ-ள் : ‘மல்லல் மால்வரை’ (அகம் 52) எனவும், ‘ஏகல்லடுக்கம்’ (நற்.116) எனவும் மல்லலும் ஏவும், வளமும் பெற்றுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.
1. இன்னல் என்பது இனிமை + நல் எனப்பிரிக்கப்பட்டுப் பொருள் உணர்த்தும் என்பது வலிந்து கூறுதலாம். 2. இனிமை + நல் எனப் பிரிப்பது தவ-று; ஒரு சொல்லாதலின். 3. இதை இரண்டு சூத்திரமாகக் கொள்வர் சேனா வரையரும் தெய்வச்சிலையாரும். உரை எழுதும்போது இரண்டற்கும் சேர்த்து ஒரே சூத்திரம் போலக் கொண்டு உரையெழுதினார் சேனாவரையர். 4. பெற்றிய - பெருகிய. |