உரியியல் சூ.4131

பெற்று - பெருக்கம் இது  அக்காலத்துப் பயின்றது  போலும். இவை
இரண்டு சூத்திரம்.

தெய்.

(மல்லல் வளனே)

இ-ள் : மல்லல்  என்னும் சொல் வளப்பம் என்னும் பொருள் தரும்,
எ-று.

உ-ம் :மல்லல் மால்வரை (அகம் 52)
          (ஏ பெற்றாகும்)

இ-ள் : ஏ என்னும் சொல் பெற்றுதல் என்னும் பொருள்படும், எ-று.

உ-ம் :  ‘ஏகலடுக்கம்’  (நற். 116)  1பெற்றுதல் என்பது  இக்காலம்
பற்றுதல் என வரும்.

நச்

இதுவுமது.

இ-ள்: மல்லல் வளனே மல்லல் செல்வம் என்னும் குறிப்பினையும்,
ஏ  பெற்று  ஆகும்  ஏ  என்பது பெருக்கம் என்னும் குறிப்பினையும்
உணர்த்தும், எ-று.

பெற்று அடுக்குதலுமாம்.

உ-ம் : ‘மல்லல் மார் படுத்தனன் புல்லுமா றெவனோ
          ‘ஏகல்லடுக்கத்து இருளளைச் சிலம்பின்’ (அகம் 52)

என வரும்.

வெள்

இவையும் குறிப்புப்    பொருள்    பற்றி    வரும்   உரிச்சொல்
உணர்த்துகின்றன.

இ-ள் : மல்லல்  என்னுஞ்  சொல்  வளமும்,  ஏ  என்னுஞ்சொல்
பெருக்கமும் ஆகிய குறிப்புணர்த்துவன எ-று, பெற்றுபெருக்கம்.


1. ஒன்றையொன்று  பெற்று  (பற்றி)த்  தொடர்ச்சியாதல்  என்பது இதன் பொருள் போலும் சிவ.