சேனா. இ-ள் : 1 ‘விசும்புகந் தாடாது எனவும், 2 ‘உவந்துவந்தார்வ நெஞ்சமொடு ஆய்நல னளைஇ’ (அகம். 35) எனவும், உகப்பும் உவப்பும், உயர்தலும் உவகையுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. தெய். (உகப்பேயுயர்தல்) இ-ள் : உகப்பு என்னும் சொல் உயர்தல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : விசும்புகந் தாடாது (உவப்பே உவகை) இ-ள் : உவப்பு என்னும் சொல் உவகை என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : உவந்துவந் தார்வ நெஞ்சமொடு (அகம். 35) நச். இதுவுமது. இ-ள் : உகப்பே உயர்தல் உவப்பே உவகைஉகப்பு உயர்வு என்னும் குறிப்பினையும் உவப்பு உவகை என்னும் குறிப்பினையும் உணர்த்தும்,எ-று. உ-ம் : ‘விசும்புகந் தாடாது இரைதேர்ந் துண்ணாது, ‘உவந்துவந் தார்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇய’ (அகம் 35) என வரும். வெள். இதுவுமது. இ-ள் : உகப்பு என்னுஞ் சொல் உயர்தலும், உவப்பு என்னுஞ் சொல் உவகையும் ஆகிய குறிப்புணர்த்துவன, எ-று. உ-ம் : ‘விசும்புகந் தாடாது’ என உகப்பு உய்வுணர்த்தியது. ‘உவந்துவந் தார்வ நெஞ்சமொடு ஆய்நல னளைஇ என உவப்பு உவகையுணர்த்தியது.
1.பொருள்: விண்ணில் உயர்ந்து பறவாமல். 2. விரும்பி விரும்பி ஆர்வ நெஞ்சமொடு ஆய்ந்த அழகைக் கலந்துண்டு. |