36தொல்காப்பியம் - உரைவளம்

சேனா.

(பயப்பே பயனாம், பசப்பு நிறனாகும்)

இ-ள் : ‘பயவாக் களரனையர்  கல்லாதவர்’ (குறள் 406)  எனவும்,
1‘மையில்   வாண்முகம்  பசப்பூ  ரும்மே  (கலி  7) எனவும் பயப்பும்
பசப்பும், பயனும் நிற வே-றுபாடுமாகிய குறிப்பும் பண்பும் உணர்த்தும்,
எ-று.

தெய்.

இ-ள் : பசப்பு என்னும் சொல் நிறத்தை உணர்த்தும், எ-று.

உ-ம் : மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே (கலி. 7)

நச்.

இது, பண்பு.

இ-ள் : பசப்பு  நிறன்  ஆகும் - பசப்பு நிறன்  என்னும்  பண்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’ (கலி.7) என வரும்.

வெள்.

(பயப்பே பயனாம், பசப்பு நிறனாகும்)

இ-ள் : பயப்பு என்னுஞ் சொல் பயன் என்னும்  குறிப்புணர்த்தும்;
பசப்பு என்னுஞ் சொல் பசலை நிறம் என்னும் பண்புணர்த்தும்.

உ-ம் : ‘பயவாக் களரனையர்  கல்லாதவர்’  எனவும்,   ‘மையில்
வாண்முகம் பசப்பூ ரும்மே’ எனவும் வரும்.

ஆதி

உ-ம் :பயப்பு-ஈனுதல்-பயன்
          பசப்பு-பாசாங்கு-பசலை நிறம்


1. பொருள்: குற்றமில்லாத ஒளியுடைய முகம் பசலைநிறம் பரவும்.