49

இளம்:

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவையெல்லாம் குறிப்பு.

வ-று : ‘அதிர்கண் முரசம்’  என்றக்கால்   நடுங்குகண்   முரசம்
என்பதாம்.

‘விதிர்ப்புற்றுக் கண்ணிமையார்’ என்றக்கால் நடுக்குற்று என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘அதிர    வருவதோர்   நோய்’ (குறள்  429)   எனவும்,
1விதிர்ப்புற வறியா  வேமக்  காப்பினை’ (புறம் 20) எனவும் அதிர்வும்
விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

2‘அதிழ்வு’   என்று   பாடம்  ஓதி,  ‘அதிழ்கண்  முரசம்’  என்று
உதாரணங் காட்டுவாரும் உளர்.

தெய்:

இ-ள் : அதிர்வு  என்பதூஉ-ம்,  விதிர்வு  என்பதூஉ-ம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ-று.

உ-ம் : 3‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
           அதிர வருவதோர் நோய்’ (குறள். 429)’.
           ‘விதிர்ப்புற வறிய வேமக் காப்பினை’ (புறம். 20)

நச்.

இதுவுமது.

இ-ள் : அதிர்வும்   விதிர்ப்பும்  நடுக்கஞ்   செய்யும் அதிர்வும்
விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் : அதிர வருவதோர் நோய்

விதிர்ப்புற வறியா ஏமக் காப்பினை (புறம். 20) என வரும்.


1. பொருள் : நடுக்கமுறுதலறியாத சேமமாகிய காவலுடையை.

2. யார் என்பது அறியக்கூடவில்லை.

3. பொருள்: எதிர்காலத்து வரக் கடவதாகிய ஒன்றை முன்னதாக
              அறிந்து காக்கவல்ல  அறிவுடையார்க்கு நடுங்கும்படி
              வரக்கூடிய துன்பம் இல்லையாம்.