சொல்லதிகாரம் - இடையியல்167

வ-று :‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம்.1) என வரும்.
உம்மை எதிர்மறை யாகலின் குறையாது நிற்றலே பெரும்பான்மை.

சேனா.

இ-ள் : செய்யுள்   இறுதிக்கண்  நின்றிசைக்கும்  ஈற்றசை  ஏகாரங்
கூற்றிடத்து ஒரு மாத்திரைத் தாகலும் உரித்து எ-று.

உ-ம் :‘கடல்போற்  றோன்றல  காடிறந்தோரே’  (அகம்1)  என்புழி
ஓரளபாயினவாறு கண்டு கொள்க.

தேற்ற  முதலாயின   நீக்கி   ஈற்றசையே    தழுவுதற்கு    ‘ஈற்று
நின்றசைக்கும்’  என்றார்.  செய்யுளிடை  நிற்பதனை  நீக்குதற்கு ‘ஈற்று`
நின்றசைக்கும்’  என்றே  யொழியாது  ‘இறுதி’   என்றார். மேல் நின்ற
செய்யுளுறுப்போடு  பொருந்தக்  கூறுதற்கண் என்பார்  ‘கூற்று வயின்’
என்றார். உம்மை எதிர்மறை.

தெய்.

ஏகாரத்திற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் ;  செய்யுள்   இறுதிக்கண்    நின்று    ஒலிக்கும் ஏகாரம்
சொல்லுமிடத்து ஒரு மாத்திரையாகி நிற்கவும் பெறும்: எ-று.

உ-ம் :‘கடல் போற் றோன்றல காடிறந் தோரே, (அகம் 1) இது ஒரு
மாத்திரையாகி நிற்கும்.

நச்.

இஃது, ஈற்றசை ஏகாரத்திற்கு வேறோர் இலக்கணங் கூறுகின்றது.

இ-ள் :ஈற்று நின்று இசைக்கும் ஏ என்இறுதி- செய்யுள் இறுதிக்கண்
நின்று    இசைக்கும்    ஈற்றசை    ஏகாரம்,    கூற்றுவயின்-   அச்
செய்யுளிடத்துப்  பா என்னும் உறுப்பினை  நிலை  பெறக் கூறுமிடத்து,
ஓர்    அளபு    ஆகலும்    உரித்தே-தனக்கு    உரிய    இரண்டு
மாத்திரையேயன்றிப்  பின்னரும் ஒரு மாத்திரை  உண்டாய்  வருதலும்
உரித்து, எ-று.

உம்மையான்,  மூன்று மாத்திரை பெறாது இரண்டு மாத்திரை பெற்று
வருதலும்  உரித்து  ஆயிற்று.  பா என்னும்  உறுப்பினை  நிலைபெறக்
கூறுமிடத்து மூன்று மாத்திரை பெறுவது செய்யுள்  இறுதிக்கண்  நிற்கும்
ஈற்றசையே  என்பது  அறிவித்தற்கு  ‘ஏயென்  இறுதி’  என்று மீட்டுங்
கூறினார்.