சொல்லதிகாரம் - இடையியல்197

எண்ணிடைச் சொல் வினையொடும் வருதல்
 

288.

வினையொடு நிலையினு மெண்ணு நிலை திரியா
நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே             (45)

(வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா
நினையல் வேண்டும அவற்று அவற்று இயல்பு ஏ)
 

ஆ.மொ.

இல.

The  morphemes  which  are  used in  counting  will  not change in
their  nature  even if they appear in verbs. The  nature  of  each must
be remembered.

ஆல்.

The   morphemes of enumeration do not change their nature when
they  occur  along  with  verbs. one  must  find  out  these  particular
usages.

பி.இ.நூ.

நன். 430  

வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன.

இல.வி. 262

வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன.

இளம்

என்பது  மேலே  யெண்களைக் காட்டின வழியெல்லாம் பெயரொடு
படுத்தே   காட்டினார்;   இனி,   வினையொடு  அவ்   வெண்களைக்
காட்டுகின்றார்.

வ-று ; ‘அறுத்துக் குறைத்துச் சுகிர்ந்து  வகிர்ந்து இட்டான்’  எனச்
செவ்வெண்  வினையான்  எண்ணின  வாறு.   ‘அறுத்தும்  குறைத்தும்
சுகிர்ந்தும்  வகிர்ந்தும்  இட்டாம்’  என  உம்மை யெண்  வினையொடு
கூட்டி எண்ணியவாறு.

பல     வெண்ணும்      வினைக்கு     வாரா;      வருமிடத்து
இத்தொடக்கத்தனவே வருவன கொள்க.