2. - பதவியல்

45

   
     வ - று. ஆ, ஈ, ஏ, ஐ, ஓ, ஒள; மா, மீ, மூ, மே, மை, மோ; தா, தீ, தூ, தே, தை;
பா, பூ, பே, பை, போ; நா, நீ, நே, நை, நோ; கா, கூ, கை, கோ; வா, வீ, வே, வை; சா,
சீ, சே, சோ;, யா; நொ, து எனவரும். இவை சிறப்புளவெனவே, சிறப்பில்லனவும்
சிலவுளவாயின. அவை ஆறாமுயிரும், பகரவீகாரமும், சி, சூ, சை, கௌ, வௌ என்பன
போல் வனவுமெனக்கொள்க. ‘உயிர் மவிலாறும்’ என்றதனை, அவ்வவ்வருக்கங்களி
லெனக் கொள்க

(2)

 

(129)

பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்
எழுத்தீ றாகத் தொடரு மென்ப.

     எ - ன், மேல் நிறுத்தமுறையானே தொடரெழுத்துப்பதத்திற்கு வரை
யறையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பகாப்பதம் இரண்டெழுத்துமுதல் ஏழெழுத்தீறாகவும் பகுபதம்
இரண்டெழுத்துமுதல் ஒன்பதெழுத்தீறாகவும் தொடருமென்பர் புலவர் எ - று.

     வ - று. அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி எனப்
பகாப்பதம் தொடர்ந்தவாறு. கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன்,
அரங்கத்தான், * அத்திகோசத்தான், உத்திரட்டாதியான் எனப் பகுபதந் தொடர்ந்தவாறு.
கங்கைகொண்ட சோழபுரம், இரதநூபுர சக்கரவாளம் (சூளா. இரதநூபுர. 12), பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றற்றொடக்கத்து ஒட்டுப்பெயர்க்கு
வரையறையில்லை யெனக்கொள்க.

(3)

 

(130)

பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்.
 
     எ - ன், நிறுத்தமுறையானே பகாப்பதமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒன்றாய்நின்று ஒருபொருள் தருமொழியைப் பலவாகப்பிரித்தால்
அதனால் வருவதோர்பயனற்று இடுகுறியாய்த் தொன்றுதொட்டு ஒரு பிண்டமாய்
நடக்கின்ற பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமென்று
வழங்குகின்றவை பகாப்பதம் எ - று.

     வ - று. நம்பி, நங்கை, சாத்தன், சாத்தி, கொற்றன், கொற்றி, தந்தை, தாய்,
யானை, குதிரை, உயிர், உடம்பு, மலை, வெற்பு, தீ, நீர், ஒன்று, கழஞ்சு, கலம் எ - ம்;
வான், நிலம், அகம், புறம் எ - ம்; யாண்டு, வேனில், பங்குனி, ஆதிரை, பகல், இரா,
காலை, மாலை, 1நெருநல், இன்று எ - ம்; கண், செவி, மூக்கு, கை, கால், கோடு, சினை,
தளிர், பூ, காய், கனி எ - ம்; செம்மை, வெண்மை, கருமை, நெடுமை, குறுமை, இன்மை,
உண்மை எ - ம்; உணல், தினல், செலவு, வரவு, கூத்து, பாட்டு எ - ம்

     * யானைமேலேற்றுமளவான நிதிக்குவையையுடையவன்.