நன்னூல் விருத்தியுரை |
இ-ள்: இவ் ஆறும் வல்லினமாம் எ-று. (13) |
மெல்லினம் |
69. | மெல்லினம் ஙஞணந மனவென வாறே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: இவ் ஆறும் மெல்லினமாம் எ-று. (14) |
இடையினம்
|
70. | இடையினம் யரலவ ழளவென வாறே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: இவ் ஆறும் இடையினமாம். (15) |
இனவெழுத்து |
{71} | ஐஒள இஉச் செறிய முதலெழுத் திவ்விரண் டோரின மாய்வரன் முறையே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: இனம் இல்லாத ஐகார ஒளகாரங்கள் ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைத் தமக்கும் இனமாகப் பொருந்த, முதலெழுத்துக்கள் இவ்விரண்டு ஓர் இனமாய் வருதல் முறை. ஆதலால் அவை இனவெழுத்து என்றும் பெயரவாம் எ-று. (16) |
இனத்திற்குக் காரணம்
|
72. | தான முயற்சி யளவு பொருள்வடி வானவொன் றாதியோர் புடையொப் பினமே. |
எ-னின், மேல் இனம் என்றதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்; தானம் முதலியவாய இவற்றுள் ஒன்று முதலாக ஒருபுடை ஒத்தலால் இனமாம் எ-று. தானம் உரம் முதலியன. முயற்சி இதழ்முயற்சி முதலியன. அளவு மாத்திரை. பொருள் பாலன் விருத்தன் ஆனாற்போலக் குறிலினது விகாரமே நெடில் ஆதலின் இரண்டற்கும் பொருள் ஒன்று என்று முதல்நூலான் நியமிக்கப்பட்ட பொருள். |