மேவிய
செய்யுளின் முதற்சீர்க் கண்ணே
விலங்கின் கதியும் நரக கதியும்
பாவியல் பாடப் பழியது முடியும் |
என்றார் 2தொல்காப்பியனார்.
(கு - ரை).
தன்னை : ஒருமை பன்மை மயக்கம்.
(பி - ம்.)
1 முன்னர் 2 சொல்காப்பியனார் (21)
|
கணப்
பொருத்தம்
|
|
|
22. |
நேரசை
மூன்றிய மரன னிரைப்பின்பு நேரிரண்டு
சேர்வன திங்கள் நிரையசை மூன்றும் செழுநிலமாம்
நேரசைப் பின்பு நிரையிரண் டாய்வரின் நீர்க்கணமாம்
தேரிய லல்குற் றிருவே யிவைநல்ல சீர்க்கணமே. |
(உரை
I). எ - ன், நற்கணநான்குமாமாறுணர்த் .............று.
நேரசை மூன்று கூடியசீர் இந்திரகணம் ; நிரையசை
முன்னே நேரிசை
யிரண்டு கூடியசீர் சந்திரகணம் ; நிரை மூன்று கூடியசீர் நிலக்கணம் ;
நேரசை முன்னே நிரையசை இரண்டு கூடியசீர் நீர்க்கணம். இந்நான்கு
சீர்க்கணமும் நன்மை தரும். இவற்றானே முதற்சீர் மொழிக எ - று.
என்னை,
|
இந்திர கணமே
பெருக்கஞ் செய்யும்
சந்திர கணமே வாணாள் தரூஉம்
சீர்த்த நீர்க்கணம் பூக்கணஞ் செழுந்திரு
ஆக்கு மென்றாங் கறையப் படு்மே |
என்பது மாமூலம்.
|
நேரசை யாகவும்
நிரையசை யாகவும்
சீர்பெற வெடுத்தல் சிலவிடத் துளவே |
என்பது இந்திரகாளியம்.
இவை சிறப்பானமையின் முன்னெடுத்தோதினாரெனக்
கொள்க.
(உரை II)
எ - து, கணப்பொருத்தமாமாறுணர்த்..........று.
(கு - ரை.)
தேமாங்காய் - இந்திரகணம். புளிமாங்காய் - சந்திரகணம்.
கருவிளங்கனி - நிலக்கணம். கூவிளங்கனி - நீர்க்கணம். (22)
|