பக்கம் எண் :
 
314

314. நூ: ஒருமுன் கால்எனும் காலத் திரிபெயர்
        வருகால் மிகுமேல் ஐயப் பொருளாம்
        மிகாதேல் ஒருபோ தெனும்பொருள் இயல்பே.

    பொ: ஒரு என்னும் எண் திரிபு உருமுன் காலத் திரிபெயர்ச்சொல் வந்து நின்று, வலிமிகுமேல் ஐயப்பொருள் காட்டும்; ஒற்று மிகாதேல் ஒரு போதென்னும் இயல்புப் பொருள்படும்.

    சா: ஒருக்கால் நான் வராவிட்டால் (ஐயம்); இன்னொருக்கால் வரும்போது உண்பேன் என்புழி முறை-என்னும் பொருளுறுதலை இயல்பில் அடக்குக.  ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் (இயல்பு).

315. நூ: செய்யுமுன் என்பதைச் செய்யா முன்னெனச்
        செய்வதற் குள்ளெனச் சொலல்வழு வமைதி.

    பொ : செய்யுமுன் அல்லது செய்வதன்முன் என்று குறிக்க வேண்டுவதைச் செய்யாமுன் செய்வதற்குள் என்னும் வாய்பாடுகளான் கூறுவது வழுவாயினும் பெருவழக்காகலின் அமைதியாம்.

‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ - செம்மை.

முக்காலுக் கோமுன் முன்னரையில் வீழாமுன்-  }  
அக்காலரைக் கால்கண்டஞ்சாமுன் - என்பன வழுவமைதி.
விக்கி இருமாமுன் (காளமேகம்)  

 

    நான் வருவதற்குள் எழுதிவிடு - வழக்குத்தொடர் அமைதி.  வீட்டுக்குள் எனப்பெயர்ப்பின் நான்கனுருபும், ஏழுனுருபும் சேர்ந்து வீட்டுள் எனக் குறிப்பதை ஈண்டே அமைக்க.

316. நூ: செய்யுமென் எச்சமும் முற்றும் ஈற்றயல்
        உயிர்மெயும் உயிரும் ஒழிதலும் உண்டே.

    பொ: செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும், வினைமுற்றும், ஈற்றயலில் உயிர்மட்டோ உயிரொடு மெய்யுமோ நீங்கிவிடுவதும் உண்டு.

    போம்பொழுது; வாம்புரவி-தாயொடு அன்புபோம்; தந்தையொடு கல்விபோம்.  ஈற்றயல் உயிர்மெய் கெட்டன.  (ஆம்) கலுழ்மே: கேள்(ண்)ம்: என உயிர் கெட வருதல் இரண்டாய் வைத்த முற்றிற்கேயாம். (424) இருந்தொழுவர் மிசைப்பாயுந்து; (396) கீழ்நீரால் மீன் வழங்குந்து என எச்சமும், முற்றும் (செய்யும்+து) துப்பெறுதல் தொல் பழவழக்கென்க.  மிசைப் பாயுந்து எச்சமாதலைப் பெயரெச்ச அடுக்காய் இறுதியில் வரும் பாயும் - நல்லூர் என்பவற்றான் அறிக.