மேல் விசிறியைப்போல, இகரத்தை மேற்சுழித்தும், ஆய்தப் புள்ளி
எனப்படும் ஆய்தம் முக்கூட்டாக
மூன்று சிறுவட்டச் சுழிகளிட்டும்
எழுதப்பெறலாம்.
வி:
இவ்வோரெழுத்தால் தமிழெழுத்தே பிராமித் திரிபு என்ப தொழியச்
சிறு திருத்தம் வேண்டிற்று.
ஆய்தத்தை முப்பொட்டுப் புள்ளியிட்டுக்
குறித்தல் கணக்குக் குறியாய்ப்பயனுறலானும், நச்சினார்க்கினியர்
இவ்வாறு
(தொல் - 2 - உரை) குறித்தலானும் ஆய்தத் திருத்தம் கூறியது.
நுதலுரை:
இந்நூற்பாமுதல் ஏழுநூற்பாக்களில்
கூறப்படும்வடிவெழுத்துகள் பற்றியகருத்து இற்றை அச்சுவாய்ப்பிற்கு
தமிழெழுத்து பல்கியிருத்தல் எல்லாரும் அறியக்கிடத்தலின் அவற்றிடை
வேண்டும் மாற்றம் கூறுதல்
நுதலிற்று.
38. நூ: ஒளஊ உயிரின் ளப்போல் துணைக்குறி
ஒன்றைக் கொம்பும், காலும் ஒன்றிய
பெற்றித் தாமே; பிரித்திடல் நன்றே.
பொ:
ஊ என்னும் உயிர் எழுத்திலும், ‘ஒள’ வுயிரிலும் அஃது ஏறும்
உயிர்மெயிலும் அமையும் ‘ள’ப்போன்ற
துணைக்குறி முன்னம் ஒற்றைக்
கொம்பும்காலும் இணைந்து அமைந்த தன்மையுடையது. அதனை இக்கால்
‘ள’ கரத்தினின்று தெளியப் பிரித்து எழுதுவதே நல்லது. ஊ > உª£;
ஒள > ஒª£; கௌ > கெª£
39. நூ: ஆகா ரத்தின் கீழ்விலங் குக்குறி
னாணா றாஎன மூன்றிற் கேறிக்
குழப்பு வதிலும்அந் நான்கையும் மாற்றி
இடப்புறம் காலிடல் எளியநன் மாற்றமே.
பொ:
‘ஆ’ உயிர்நெடிலின் கீழ்வளைவுக்குறி
B
Z
A
என்னும் மூன்று
எழுத்துக்களின் வாய்ப்புக்கியைய உயிர் போல் அமைய, பிறபதினைந்து
எழுத்துக்களும்
கால்பெற்றுக் குழப்புவதை விடப்பெரும்பான்மை நோக்கி
அந்நான்கிற்கும் காலிட்டெழுதுவது எளிய
நல்ல மாற்றமே அன்றோ.
சா:
B
- னா;
Z
- ணா;
A
- றா; ஆ -அ£.
உயிரெழுத்தையும் மாற்ற வேண்டுவது - அவ்வாறு ஓரெழுத்துருவம்
குறைவதனாலும், உயிர் எழுத்துகட்கும்
உயிர்மெய் எழுத்துகட்கும் ஒருருவ
இயைபு இருத்தலினாலும் என்க.
ஒகர, ஓகார உயிர்மெய்யாங்காலும் இவ்வகை தொடர்க. றொ, னொ,
ணொ, றோ, னோ, ணோ.
|