பக்கம் எண் :
 

    ஆ.  கல் - கள் - காள் - காளி (கரியவள்) (இஃதொரு தனிக்கிளை.)

    காளம் - காளமேகம்.

    கருமை - கறுப்பு வேறுபாட்டுக் கட்டுரையொன்று பாவாணரால்
தமிழ்ப்பாவையில் எழுதப்பட்டதை அறிந்தும் காண வாய்ப்பிலன்
இந்நூலாசிரியன்.

    இ.   கல் - கல்லுதல் - தோண்டுதல் - கல்வி (தொட்டனைத் தூறும்)
கல் - கறித்தல் - கடித்தல் - கறி - மான்கறி - காய்கறி: மலைகல்லி எலி  பிடித்தல்.  (இது வேறு வழி).

    ஈ.   கல் - கல்+து=கறு - கறுப்பு (தவல் - தவல்+து=தவறு)
        கறி - கருமிளகு.
        கல்தோன்றி (கருமலை)

    கறுத்தின்னாச் செய்தவக் கண்ணும் (குறள்) எனத் தொல்காப்பியம்
கூறியாங்கே சினப் பொருள்படல் கருமுகம் மேலும் சினத்தில் கறுத்தலான்
போலும்.

    இதனானன்றே செம்முகம் சினத்தில் சிவத்தலான் அதையும்
சினக்குறியாய்க் கூறியது.  (கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்-தொல்).

349. நூ: கடியென் சொற்கு விரைவும் மணமும்
        நடைமுறைப் பொருளே; பழம்பொருள் பலவே.

    பொ: கடியென்னும் சொல்லுக்கு விரைவும், மணமும் நடைமுறைப்
பொருளாகும்.  பழம் பொருளாக இலக்கண நூல்கள் மேலும் பல கூறும்.

சா: காரெனக் கடிது சென்றான்(கம்ப) | கடிமரம் - (காவல்மரம்) முதல் பழம்பொருள் மேலும் பத்துக் கூறுவதைப் பழநூலுள் காண்க.
  கடிதாகப் போ - வழக்கு
  கடிகமழ்தார் - மணத்தல்

    கடிகால் என்று பாரவண்டியின் குத்துக்கழியைக் காப்புப் பொருட்டுக்
குறித்தல் சிறுவழக்கு.

கடிநூற்குப்பொன் - (மங்கலநாண்) உரை.
கடிமணம் - (பெ.பு.) ஒரு பொருட் பன்மொழி.
கடுப்பு - கடுகடுத்தல் - எனச் சினஞ் சுட்டுவது கடுமை என்னும் பண்படிச்சொல்.