பக்கம் எண் :
 
40

40. நூ: மெய்யோ டைப்புணர் வுறவரும் முன்குறி
       மெய்யாய் ஒருசுழிக் கொம்பிரண் டிணைந்ததே;
       முன்சுழி யுடைய னணலள நான்கும்
       பின்வழி யினரால் திரிபுருப் பெற்றவே.

 

    பொ: மெய்யெழுத்தோடு ‘ஐ’ புணர வரும் உயிர்மெய்உருவில்
அமையும் இரட்டைச்சுழிக் கொம்பு உண்மையில் இரண்டு ஒருசுழிக்
கொம்புகள் இணைந்ததே.  இதனோடும் ன, ண, ல, ள - என முன்பு
சுழியுடைய இந்நான்கெழுத்துகளும் பின் வந்தோரால் திரித்து

எழுதப்பெற்றனவே.

 

    எனவே எழுத்தெண்ணிக்கைச் சுருக்கம் நோக்கி முன்வழங்கிய உண்மை
உருப்பட எழுதுவதே சாலும் என்றவாறு ªª = ¬.

 

    ஹ > னை; ஸ்ரீ > ணை; -லை; க்ஷ-ளை;

 

    மேல்வரி வடிவ உண்மைகள் (தொல். 17) உரையாசிரியர் உரையினின்று
உன்னி உணர்ந்தவாறு சொல்லப்படுகிறது. கல்வெட்டுக் கிடைப்பின்
சான்றமையும்.

 

41. நூ: எதிர்கா லத்தின் முதிர்கோ லத்தில்
       ஐஒள என்னும் உயிரும் அதன்வழி
       உயிர்மெயும் அற்றுப் போதல் ஒக்குமே.

 

    பொ: எதிர்காலத்தில் அறிவு முதிர்பொழுது எழுத்துச் சீர்
திருத்தப்போக்கில் ஐ, ஒள என்னும் இரண்டு உயிர்எழுத்துகளும் ஒழிய,
அப்படியே அவற்றால் தோன்றும் உயிர்மெய் முப்பத்தாறும்
அற்றுப்போவதாதல் பொருந்தும்.

 

    ஐ, ஒள என்பன அஇ, அஉ என்னும் கூட்டொலியே ஆதலானும்,
இக்கால் அது, அய்; அவ் என்றே எழுதப்பொருந்துவதாலும் எழுத்துக்
குறைப்பிற்கு அவற்றின் நீக்கம் ஆக்கமே என்றவாறு.  உயிர்மெய்
எழுத்தையும் - கய், கவ் என்றே எழுதத்தகும்.  இம்முறை பண்டை
நூல்களிலும் ஆங்காங்கே விரவியுள.

 

42. நூ: உஊ உயிரியை ஆறா றுயிர்மெய்
       மூவகைத் திரிபுருப் பெற்று முடியும்
       அமைப்பு நோக்கின் வியப்பு மிகுமே.

    பொ: உ; ஊ என்னும் இரண்டுயிரும் பதினெட்டு மெய்யில்
ஏறத்தோன்றும் முப்பத்தாறு உயிர்மெய்களும் மூன்றுவகையான

திரிபமைப்புகளில் முடியுமாறு முன்னோர் அமைத்துள்ளமை கருதி நோக்கின்
அவர் நுண்மாண் நுழைபுலம்கண்டு வியப்பே எஞ்சுவதாம்.