சா :
முருகன் அருளுவன்-என்னும்கடவுட் பெயரும், நரிமாமா வந்தார் - என்னும் குழந்தைக் கதை மரபுப் பெயர்க்
கூற்றும் அவ்வகைய.
49. நூ: ஆண் பெண் இரண்டும் அலது என அமைந்த
ஞாலப் பொருள்களை ஒருமை பன்மை
என்னும் எண்ணோடியையக் கூட்டி
ஐம்பால் ஆக்குவர் தொன்மைச் சான்றோர்.
பொ:
ஆணென்றும், பெண்ணென்றும், இரு தன்மையும் அல்லாதது என்றும் அமைந்திருக்கும் உலகப்பொருள்களை
ஒருமை பன்மை என்னும் எண்ணிக்கை முறையில் தொடர்புறுத்திப்பால் ஐந்தென்பர்; பண்டைத் தமிழ்ச்
சான்றோர்.
பெண்ணாகி ஆணாய் அலியாய் (திருவெம் 18) திறவுகோலை இரட்டை ஆண், பெண் என்று பிரித்துரைப்பினும்
இரண்டும் அலது பெரிதும் உயிரற்ற பொருள்களே. எண்ணைத் தனித்துக் கூறாமல் பாலில் அடக்குவர்
பண்டையோர் என்றபடி.
உயர்திணை |
அல்திணை |
நேர்ப் பிரிவால் திணை வகையும்
குறுக்குப் பிரிவால் எண்ணும் - பால் காட்டுவது அறிக. |
சூ |
ஆண்பால்
பெண்பால் |
ஒன்றன் பால் |
ப |
பலர்பால் |
பலவின் பால் |
50. நூ: அவற்றுள்,
ஆண் பெண் பலர் எனல் உயர்திணைப் பிரிவே
ஒன்று பலவிவை அஃறிணைக் குரிய.
பொ:
அவற்றில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்பன
உயர்திணைப் பிரிவாம். ஒன்றன்பால், பலவின்பால்
என்னும் இவை
அஃறிணையில் அடங்கும்.
சா:
களிறு, பிடி; சேவல், பெட்டை என அஃறிணைக் கண்ணும் பால்
வேறுபாடுள்ளதாகவும் ஒன்றன்பால் எனவகுத்தது
- இருபாற் சொல்லும் ஒரே
இறுநிலைபெறுதலின் பொருள் நோக்கூடே சொற்றொகுப்பு நோக்கி
ஒன்றாக்கப்பட்டது
என்க.
(ஆவந்தது, எருது வந்தது. மந்தி எழுந்தெழுந்து கைந்நெரிக்கும்
ஈங்கோயே; வானரங்கள் கனிகொடுத்து
மந்தியொடு கொஞ்சும்).
51. நூ: தன்னைச் சுட்டும் தன்மை; தனக்கு
முன்னைச் சுட்டும் முன்னிலை; இரண்டும்
அன்மையைத் தொலைவிலும் அருகிலும் படர்ந்து
சொல்லும் படர்க்கைஎன் றிடம்மூ வகையே.
|