பொ:
இடைநிலைகாட்டத்தகும் காலத்தைச் சில விடத்து முதனிலை
இரட்டித்துக்காட்டியதுபோல இயல்பாகவே
இறுதி நிலையும் சில சொல்லில்
காலங்காட்டும்.
பின்வரும் மூன்று நூற்பாக்கள் இதனை விளக்கும்.
161. நூ: வியங்கோள் ஏவல் ஆய்மின் எதிர்வு
சா:
செல்க, போ, கூவாய், வம்மின்
162. நூ: செய்யநிகழ்வெதிர் செய்யின் எதிர்வே
சா:
உய்யக்கண்டான், உய்யக்கொண்டான்; ‘உணின் உண்க’
163. நூ: செய்யுமென் முற்று முற்றும் எதிர்வே
செய்யுமென் எச்சம் பெரிதும் எதிர்வும்
சிறிதே நிகழ்வும் செறிந்தே நிகழும்
சா:
என்னாயினும் உலகம் வாழும்; பெய்யெனப் பெய்யும்மழை;
‘வரும்மாடு தான் நன்று -
இவை அறுவகையும் இறுதிநிலை யின்றியே காலங்காட்டின.
164. நூ. செய்யும் எனும்வாய் பாட்டைப் பிரித்தல்
வேண்டின் இடைநிலை இல்லனவாம் சில
கவ்வொலி பயில்வது காலமில் இடைநிலை.
பொ:
செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்களைப் பிரித்தலாகாது;
பிரிக்கவேண்டுமாயின் சில
சொற்கள் இடைநிலை இல்லாதனவாம்.
கவ்வொலி பயிலும் சொற்களில் உள்ள ககரம் காலம் காட்டா
இடைநிலையாம்.
ஓடும்; வரும்; நடக்கும்; இறுதிநிலை காலங்காட்டலின் ககரம் காட்டாதாம்.
165. நூ: அ, உம் பெயர்க்குறை இறுதி; உ, அ
இன்-இவை வினைக்குறை; இ, உவில் அடக்குவர்.
பொ:
செய்தசெய்கின்ற என்னும் பெயரெச்சத் திறுதிநிலை அ; செய்யும
என்பதன் இறுதிநிலை உம்;
முக்கால வினையெச்சங்களின் இறுதி முறையே
(செய்து) உ; (செய) அ (செயின்) இன்-இவையாம். வினையெச்சத்தினே
இகர
இறுதியைப் பொருள் முடிவுபற்றி உவ்வில் அடக்குவர்.
சா: |
செய் |
+ |
த் |
+ |
அ; |
செய் |
+ |
கின்று |
+ |
அ; |
செய் |
+(ய்)உம்; |
|
|
செய் |
|
த் |
|
உ; |
(செய் |
+ |
இ) |
செய் |
+ |
அ; |
செய்+ |
இன்(த்+ஆல்) |
|