231. நூ: வன்றொடர் அல்லன ஐந்தும் வலிவரின்
அல்வழிக் கண்மிகா; வேற்றுமைக் கண்ணே,
ஒற்றிடை மிகாநெடில் ஒழிந்தனமிகுமே.
பொ:
வன்றொடர் அல்லாத ஐந்தும் வலிமுதல் வந்தால்
அல்வழிப்பொருளில் மிகா. வேற்றுமையில் ஒற்றிடை
மிகாதுநிற்கும் நெடில்
அன்றிப் பிறநான்கும் மிகும் என்றவாறு.
சா:
இது பண்டைய ஒலி மாற்றம் பற்றிப் புது விதி கொளுவியது
முன்னூல்களில், ‘இடைத்தொடர், ஆய்தத்தொடர்,
ஒற்றிடை மிகா
உயிர்த்தொடர், நெடில்தொடர் - வேற்றுமையினும் மிகா என்பதுவிதி.
இந்நாள்
திரிந்தது.
சா:
அல்வழி; வந்து கொடுத்தான், எஃகு திண்ணியது, ‘சார்பு
தரும்நோய்’; உருபுபுணரியல், பாடு கிடந்தாள்.
வேற்றுமை: குரங்குக்குட்டி, எஃகுத்தொழில்,
மரபுத்தொடர், மார்புக்கூடு, தூசுப்படை.
சாய்வுப்பலகை, மருந்துக்கடை, வேற்றுமைத்தொகை யென்க. அங்குக்
கொண்டான், இங்குக் கிடைக்கும்
எனக் காட்டுவன இக்கால் வலிக்காது
ஒலித்தல் உணர்க.
அரசுப் போக்குவரத்து, அரசுச் செயலகம் என வேண்டுவது இந்நாள்
ஒலி நிலை.
திசைப்பெயர்
232. நூ: நேர்த்திசை நான்கும் கோணத்திசைகள்
நான்கினைக் குறிக்க வடக்கு தெற்கு
முன்னுற ஏனை இருபெயர்ப் புணரும்;
முன்னன ‘வடதென்’ என்றுருப்பெறுமே.
பொ:
நேர்த்திசைப் பெயர்கள் நான்கும் கோணத்திசைகள் நான்கின் பெயரைக் குறித்தல் வேண்டின்
வடக்கு, தெற்கு என்பன முன் அமையப் பிறவிரண்டு பெயர்களும் பின் வந்து சேரும். முன்னிரண்டும்
தன் உருவம் வட, தென் என்றாக நிற்கும்.
வடகிழக்கு; வடமேற்கு; தென்கிழக்கு; தென்மேற்கு.
பொதுப்பெயர் வரின் மேலிரண்டு திரிபு இருக்க, பிறவிரண்டும் திரியுங்கால் மேற்கு மேல் என்றும்
கிழக்கு கீழ் என்றும் திரியும்.
குணக்கு குடக்கு என்பன இறுதியும் ஈற்றியலும் கெடும்
சா:
கீழ்த்திசை, வடபுலம், தென்னகம், மேனாடு, மேன்மாடம் என்று ‘ல்-ன்’ ஆக மாறுதல் புணர்ச்சித்
திரிபே அன்றி வேறன்று. தென்-தெல் ஆகாமை நோக்குக.
|