பக்கம் எண் :
 
சாத்துகவிகள்552
இனிதுஅரங் கேற்றி இமையா தாரும்
 மனிதரும் பிறரும் மகிழச் செய்தனன்;
(20)
 கயல்வளை உகளக் காவி மலர்தரும்
 வயல்மலி நெல்லை மாநகர் வாழ்அக்
 கங்கைதன் குலத்தோர் களிப்புறக் கரவாச்
 செங்கைவான் முகில்நேர் செந்தினா யகவேள்
 செய்தவப் பயன்எனத் திருஉருக் கொண்டு
 கைதவம் முழுவதும் கனன்றுமெய்த் துறவுஉற்று
 எண்ணரும் பெயர்பெற்று எவ்வகை உயிர்க்கும்
 தண்ணருள் விளைக்கும் தகைமிகப் பெருக்கி
 அன்பர்கள் அறியும் ஆடல்கள் அனந்தம்
 முன்புரிந்து இன்னும் முறைப்படி முயன்று
(30)
 பாவால் திருவருட் பரவும்
 மூவா நலம்புனை முருக தாசனே.
திருநெல்வேலி போற்றிமுத்துப்பிள்ளை அவர்கள்
இயற்றியவை
எண்சீர் விருத்தம்
செவ்வைஉறும் அருணகிரி நீதான் என்றே
   திருமுருகன் இவன்கனவில் அருள்வ தாலும்
 எவ்வுயிரும் தன்உயிர்போல் எண்ண லாலும்
   எமக்கும்இவன் குருவாகி வசிப்ப தாலும்
 தெவ்வம்இலார் தொன்னூல்போல் செய்வ தாலும்
   திருப்புகழும் விருப்பமொடு மொழிவ தாலும்
 இவ்விதமாய் இருக்கின்ற நன்மை யாலும்
   ஏத்துவேன் இவன்மகிமை சாற்று வேனே.
கீர்த்தனம்
இராகம்: ஆனந்த பைரவி      தாளம்: சாப்பு
பல்லவி
அருணகிரியேயிந்த முருகதாசனாவந்த
 ஆனந்தம்பாருங்கள் புலவோரே
(அருண)