| இனிதுஅரங் கேற்றி இமையா தாரும் |
| | மனிதரும் பிறரும் மகிழச் செய்தனன்; (20) |
| | கயல்வளை உகளக் காவி மலர்தரும் |
| | வயல்மலி நெல்லை மாநகர் வாழ்அக் |
| | கங்கைதன் குலத்தோர் களிப்புறக் கரவாச் |
| | செங்கைவான் முகில்நேர் செந்தினா யகவேள் |
| | செய்தவப் பயன்எனத் திருஉருக் கொண்டு |
| | கைதவம் முழுவதும் கனன்றுமெய்த் துறவுஉற்று |
| | எண்ணரும் பெயர்பெற்று எவ்வகை உயிர்க்கும் |
| | தண்ணருள் விளைக்கும் தகைமிகப் பெருக்கி |
| | அன்பர்கள் அறியும் ஆடல்கள் அனந்தம் |
| | முன்புரிந்து இன்னும் முறைப்படி முயன்று (30) |
| | பாவால் திருவருட் பரவும் |
| | மூவா நலம்புனை முருக தாசனே. |