‘வாக்கு முகந்தேன் மலர்க்கமலம்; வண்குவளைப்
பூக்குரும்பை வேய்கண் புணர்முலைதோள்; - நோக்கல்குல்
மான்றேர்; மயிந்தன் மணியருவி வேங்கடத்துத்
தேன்றேர் குறவர் மகட்கு’.
எனவும்,
‘பூமலை நீர்உறையுள்; புள்ஏறு புள்கொடி;
வாய்மைவேல் ஆழி படைக்கலம்; - நாமம்
பிரமன் இறைக்கண்ணன்; பொன்தீக்கார் மேனி;
கருமம் படைப்பழிப்புக் காப்பு’.
எனவும்,
‘காமவிதி கண்முகம்; மென்மருங்குல் செய்யவாய்
தோமில் துகடினி; சொல்லமுதம்;-தேமலர்க்
காந்தள் குரும்பை கனகம் மடவாள்கை
ஏந்திளங் கொங்கை எழில்’.
எனவும் கொள்க [இஃது எழுத்து மாறு நிரல்நிறை]. இஃது எழுத்தாற்
கொள்ளுமா: ‘காவி கண்’ என்றும், ‘மதி முகம்’ என்றும், ‘துடி மருங்குல்’
என்றும், ‘கனி வாய்’ என்றும் விடுக்க.
இனி, வினை நிரல்நிறை வருமாறு:
[இன்னிசை வெண்பா]
‘அடல்வேல் அமர்நோக்கி நின்முகம் கண்டே
உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும்
தடமதியம் ஆம்என்று தாம்’.1
எனவும்,
[நேரிசை வெண்பா]
‘காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
போதுசேர் தார்மார்ப! போர்ச்செழிய! - நீதியால்
மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை ஏற்றார்க்கு
நுண்ணிய வாய பொருள்’.
எனவும்,
1 யா. வி. 51 உரைமேற். தொல். பொ. 403 உரைமேற்.
பி - ம். 1மாவிதழ்க்
|