| '(14) வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும் உகர மரையாம் யகரமோ டியையின் இகரங் குறுகு மென்மனார் புலவர்' 'யகரம் வரும்வழி யிகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது' |
என்றார் ஆகலின். |
(தொல். எழுத். சூ. 410.) |
வரலாறு |
நாகியாது, காசியாது, காடியாது, காதியாது, காபியாது, காறியாது என வரும். (15) ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. |
10 இனி உகரம் திரியாது வந்த குற்றியலிகரம் : மியாவென்னும் முன்னிலை யசைச் சொல்லின் கண் மகரம் ஊர்ந்து நின்ற இகரம் குற்றியலிகரமென்று வழங்கப்படும் எ-று. என்னை? |
| 'குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே' |
என்றார் ஆகலின் |
(தொல். எழுத். 34.) |
வரலாறு |
| கேண்மியா, சென்மியா எனக் கொள்க. இனி ஐகாரக் குறுக்கத்திற்குச் சொல்லுமாறு. |
அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற்கண்ணும் இன்றி 11 அல்லாத வழி வந்த ஐகாரம் தன்னளவிற் சுருங்கி (16) ஒன்றரை 12 மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகக் குறுகும்: 13 ஐகாரம் குறுகுமிடத்து முதலிடை கடையென்னும் மூவிடத்தும் குறுகும். என்னை? |
|
(14) இஃது அவிநயச் சூத்திரம் என்பர் : யா. வி. 2. உரை. (15) 'ஒழிந்தனவும்' என்றது ஏழு குற்றுகரங்களில் இங்கே காட்டிய நெடிற்கீழ் உகரங்கள் ஒழிந்த ஏனைய ஆறன்முன் யகரம் வந்து இகரமாகத் திரிந்த உகரங்கள். (16) நன்னூலார் ஐகாரக் குறுக்கத்துக்கு மாத்திரை ஒன்று என்பர். சூ. 99. |
|
(பி - ம்) 10. இனித் திரியாது வந்த குற்றியலிகரம் வருமாறு. 11. யொழிந்த. 12. மாத்திரையாய்க் குறுகும். 13. அவை குறுகு. |