பக்கம் எண் :
 
142தொன்னூல்விளக்கம்
பொருள், இன்பம், வீடு, என்னு மிவற்றின் மெய்ம்மை யறிந்து விழுப்ப மெய்தி யிம்மை
மறுமை வழுவாமை நிகழ்வாராயின் இருமைக்கு மக்களுயிர்க்குறும் பயன் யாப்பே
யாகும். யாப்பு, எ-து. பாட்டு, அதிகாரம், எ-து. அதிகரித்தல். ஆகையிலரும்பிணி
முறையி னொன்றாகத் தேவநன்னிலை யனைத்தையுங் கொண்டுளனாகி யொன்றாய்நின்
றறுகுண னெனும் பெயருடைக் கடவுளே யீண்டுச் சொல்ல முப்பொருள் வழுவிலகிக்
காப்பத வேண்டியவன் றிருப்பாத மலர் தொழுதேத்தி யாப்பின திலக்கணநூலை
விளக்கிக் காட்டுது மென்றவாறு. தெய்வத் தறுகுணமாவன:- தன் வயத்தனாதல்,
முதலிலனாதல், உடம்பிலனாதல், எல்லாநலனு முளனாதல், எங்கும் வியாபகனாதல்,
எவற்றிற்குங் காரணனாதல். ஆகையி லீண்டுமிவ் வதிகார நன்றாகத் தெய்வ வணக்கம்
வந்தவாறு காண்க. இஃது சிறப்புப்பாயிரம். எ-று.
 

முதலோத்துச்செய்யுளுறுப்பு.
Chapter I. - The Elements of Poetry.
 

202.

சிரைமுதல் யாப்புறச் சேருயிர்க் குடல்போ
லுரைமுதல் யாப்புற வுணர்பொருட் குடலாச்
சிறப்பிற் செய்வன செய்யு ளாமவை
யுறுப்பியன் மரபுமூன் றுரைப்ப விளங்கும்.
 
     (இ-ள்.) இவ்வதிகாரஞ் செய்யு ளிலக்கணநூலை யுணர்த்துவ தாதலால் இம்முதற்
சூத்திரஞ் செய்யுளாவதெனவும் இந்நூற்கூறுபாடித் துணையெனவும் அவை யிவை
யெனவு முணர்த்திற்று. ஆகையி னரம்பின் பிணிப்போ டொழுங்குபட
நிரைத்திணைத்திய பலவெலும்புகளைப் பின்னித் தசையை நிறைப்பிக் குருதியைத்
தோய்த்துத் தோலை மூடி மயிர்மேற் பரப்பி யழகு பெற வுயிர்க் கிடனாகச்
செய்யப்பட்ட வுடலைப்போலப் பலவகை மொழிக ளொருப்பட எழுத்து, அசை, சீர்,
தளை, அடி, தொடை, என் றிவற்றானும் யாப்புறவீக்கி யுணர்ந்த பொருட் கிடனாகப்
பலவலங்கார வகையாற் சிறப்புறச் செய்யப் படுவன செய்யு ளெனப்படும். ஈண்டுச்
செய்யுளைத் தெளிவுற விளக்கல்வேண்டிச் செய்யுளுறுப்புஞ் செய்யுட் டன்மையுஞ்
செய்யுண்மரபும் பிரித்துக்காட்டி மூவோத்தாக விவ்வதிகாரமுடியுமென்றுணர்க. செய்யு
ளெனினும் யாப் பெனினும் பா வெனினும் பாட் டெனினுந் தூக் கெனினுந்
தொடர்பெனினுஞ் சவியெனினுமொக்கும் - "யாப்பும், பாட்டுந்தூக்குந்
தொடர்புஞ்செய்யுளை, நோக்கிற்றென்ப நுணங்கியோரே." - என்றார் பிறரு மெனக்
கொள்க. - நன்னூல். - "பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல, சொல்லாற்
பொருட்கிடனாக வுணர்வினின், வல்லோ ரணிபெ றச்செய்வன செய்யுள்."
இதுமேற்கோள். எ-று. (1)