பக்கம் எண் :
 
2பொதுப்பாயிரம்

மொழிநூலத்தராய் முதிர்சிறப்பிணையி

லிரோமைநாட்டினின் றெய்தியமுனிவருள்

விரோதமொழிதயைமேவக

நேரமாதவத்தின் வீரமாமுனியே.

     (இதன்பொருள்). இவற்றுணூலின்பெயரு மாக்கியோன்பெயரு மாக்
கியகாரணவகையுந் தரும்பொருளளவுங் கொள்வோர்பயனுமென் றிவ்வைந் துறுப்புள
விச்சூத்திரம் பொதுப்பாயிரமாக வம்மாமுனி மாணாக்கருணூலி னெளியனெனு
மன்பிலுயர்ந்தோ னுரைத்தவாறு காண்க.

என்னையோவெனில்.-

நூலேநுவல்வோ னுவலுந்திறனே

கொள்வோன்கோடற் கூற்றாமைந்து

மெல்லாநூற்குமிவை பொதுப்பாயிரம்.

     (எ-து). நன்னூன் மேற்கோள் ஆகையில், விருத்தி; பெருங்கடல் சூழ்ந்த
பூவுலகாதி மற்றுண்டாகிய செல்வமுடைய வுலகங்களியாவையுந் தானுளவாக்கவு
நிலைபெறக்காக்கவு மழிவுறநீக்கவும் வல்லவனாகி யாதியுமந்த முமளவுமொப்பு
மெதிருமில்லாதவனா யெவ்வகைப் பொருளினு மேனின்று யர்ந்த கடவு ளொருவனை
மற்றைத் தேவரை நீக்கித் தனியே பணிந்து போற்றி மாவிராவிருளைநீக்க
விப்பூவுலகிற்றோன்றிய பருதியைப்போல மனவிருளாகிய வஞ்ஞானத்தை நீக்க
வக்கடவுளோதித் தந்த வேதநூலையோ துங் குருவேயாகி யம்மெய்க் கடவுளை
யெவருமறிந்து வணங்கவு மவனே தந்த வேதநூலெங்கும் வழங்கவு மாசையே
மனத்துட்டூண்டி யேவியதாக விதுவேகாரணமெனத்தா னெழுத்துச் - சொற் - பொரு -
ளியாப் - பணியென வைந்திலக்கணப் பொருட்களைக் கல்லாதவருங் கண்டுணரும்படி
தெளிவாகவிளக்கத் துணிந்ததைப்பற்றித் தொன்னூல்விளக்கமென விந் நூற்பெயராகிப்
பிறதமிழ்நூலோர் முன்னுரைத் தோதியவற்றைத் தானுடன்படுத்தியுந் தமிழ்ப்புறநூலோர்
விதித்தவற்றுட் சிலதான்பொருத்தியு மீண்டொரு வழிநூலென முடித்துரைத்தா ரிவராரோ
வெனின் மெய்யங் கடவுடந்த மெய்ம்மறை நூலிற் குருக்களாகச்
செல்வவிரோமைநாட்டினின் றெழுந்தருண் முனிவருளொருவராகிய வீரமாமுனி
யென்பாரெனக் கண்டுணர்க. ஆகையிலினிவருஞ் சூத்திரவிதியு முரையின்விரிவு
மம்மாமுனிதான் றரவே செவி வாயாகப் பருகி நெஞ்சு கண்ணாக வுணர்ந்துகொள்வது
கல்வி விரும்பினர்கடனே, என்றவாறு. பதிகம்-பாயிரம்-முகவுரை-ஒன்றாம்.

பொதுப்பாயிரம். - முற்றிற்று.