பக்கம் எண் :
 
4சிறப்புப்பாயிரம்
போலவுஞ் சிறிதோர் தெப்பத்தைப் பிடித்துப் பெரும் வெள்ளத்தை நீந்தி னாற்போலவு
மிங்ஙன நான்றந்தவற்றைக் கொண்டு செந்தமிழ்ப் பெருங் கடனீந்தவு முழுகவுஞ் செய்து
முற்றுல கெல்லாம் புகழப் புலவர் புதைத் தப்பெரும்பய னவமணித்தா மெடுத்தணிவதே
யெளிதா மங்ஙனமீண்டு நானொரு புதுநூலாயினுந் தொன்னூலிற் கொருபுதுவழியாயினுங்
காட்டுவ துணரா துயர்ந்த முன்னோர் தந்த நூலை விளக்குதற் கருதித் தெளிவு வேண்டி
வேறுவேறாய்ச் சூத்திரந் தரினு மூத்தோ ருரைத்த பற்பலவற்றையும் பொருத்துதும்.
ஆயினுஞ் செந்தமி ழுணர்ந்தோர் வழியே யன்றிப் புறனடையாய்ச் சில விகற்பம்
புறநூல் வழியே சென்று காட்டுது மாகையான் முன்னோர் நூலினடையினும் விகற்ப
நடையினு மெழுத்துச் சொற்பொருளியாப் பணியென வைந்திலக்கணங்களை
யைந்ததிகாரமாக வீண்டு பிரித்துக் கூறுதும், கூறிய நடையில் வழுவினு
முற்றரிதுணர்ந்தோ ரிகலா தன்பொடு தாங்கிக் கண்ட வழுவினைத் தீர்ப்பது
மீண்டைம்பொருளை யுரைத்த வழியிழிவெனினுந் துணிந்த கருத்து நன்றென வொருவாதி
வற்றைக் கொள்வதுங் கடனே, எ-று.