1. பொருள் : தலைவ! என் தாய் (தலைவி) நின்னை எதிர்பட்ட அன்றே நீ வரைந்து கொண்டதாக நினைத்து ஆதனவினி வாழ்க. பகைதணிக; அவன் வாழ்நாள் நீடுக என மனையற மாண்புகள் விரும்பினாள். யாம் ஊரன் இவளை விரைந்து வரைக; வரைவு வேண்டிவரின் எந்தையரும் கொடுக்க என விரும்பினேம். 2. பொருள் : தலைவ! நீ என் தோழியின் பெருந்தோளைப் பிரிந்ததனால் இழைத்த துன்பத்தைப் போக்குதற்கு நின் வரவின் புதுமை கண்டு முன்னறிவிப்பாகக் கரைந்து கூவிய காக்கைக்கு யாம்இடும் பலியானது, நள்ளியென்பானின் கானத்தில் வாடும் இடையரின் பசுக்கள் தந்த நெய்யுடன், தொண்டியூர் முழுதும் விளைந்த வெண்ணெல் வெண்சோற்றை ஏழுகலத்தில் ஏந்தி நாளும் இட்டாலும் மிகச் சிறிதாகுமேயன்றி அதன் உதவிக்கு ஈடாகாது. 3. அத்திறம்-தலைவியின் இல்லறவுரிமை. |