பக்கம் எண் :

கற்பியல் சூ.34257
 

“நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே”
1
  

(நெடுநல்-186-8)
 

எனவும்,
 
  

“ஒருகை பள்ளியொற்றி யொருகை
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து”
2
  

(முல்லை-75-6)
 

எனவும் வருவனவற்றான் அரிதாக உஞற்றியவாறு காண்க3.
  

இனிக் காவற்பிரிவுக்கு4 முறை செய்து காப்பாற்றுதலை எண்ணுமெனப் பொருளுரைக்க.
 
  

சிவ.
  

இச் சூத்திரம் மகளிரொடு பாசறைப் பிரிவு இல்லை என்கின்றது.
 
  

இ-ள். எண்ணுதற்கரிய பாசறையிடத்து மகளிரொடு செல்லமாட்டார் என்றவாறு.
  

இளம்பூரணர்   எண்ணரும்   பாசறை  என்பதற்கு,  “மாற்றாரை  வெல்லுதல்  கருத்து  மேற்கோடலிற்
றலைமகளிரை நினைத்தற்கரிதாய பாசறை” எனப் பொருள் கூறுவர்.
  

மகளிரை   நினைத்தற்கரிய   பாசறை   என்பதனாலேயே   மகளிரொடு   சேறல்   இல்லை  என்பது
பெறப்படுமாதலின் மீளவும்
  


1 பொருள் : “நள்  என்னும்  ஒலியுடைய  நடு இரவிலும்  துயில்  கொள்ளானாய்த்   தனக்குரிய காவல்
துணைவர்  சிலருடன்  சுற்றிவரும் வேந்தனுடைய பல வேந்தரொடு பகை கொண்டு  போர்புரிதற்குரிய
பாசறையில் செய்யும் தொழில்”. இதில் பாசறையில் வேந்தன் போரையே எண்ணும் நிலை கூறப்பட்டது.
  

2 பொருள் :  “ஒருகை   படுக்கையைப்   பற்றியிருக்க   ஒரு  கையை  தன்  தலையில்  கைக்கடகம்
சேரப்படுத்து வெற்றி குறித்து நீண்டநேரம் நினைந்து”-இதிலும் பாசறையில் வெற்றி குறித்து எண்ணுதல்
கூறப்பட்டது.
  

3 அரிதாக உஞற்றியவாறு-அரிதாக எண்ணிச் செயலாற்றியவாறு.
  

4 காவற்பிரிவு- நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவு.