பெண்ணொடு புணரார் என்னல் வேண்டுவதன்று ஆதலின் அவ்வுரை பொருந்தாது. |
இனி நச்சினார்க்கினியர், ‘பெண்ணொடு புணரார்’ என்பதற்குத் “தலைவியரோடு தலைமகனைக் கூட்டிப் புலனெறி வழக்கம் செய்யார்” எனப் பொருள் கூறியதும் சிறவாது. ஏன்எனின் புலனெறி (செய்யுள்) வழக்கம் செய்யார் என்பதனால் உலகியலில் மகளிரொடு பாசறைச் செல்வர் என்பது பெறப்படும் ஆதலின், |
புறனடை |
174. | புறத்தோர் ஆங்கண் புணர்வதாகும்1. | (35) |
|
இளம். |
இது, மேலதற்குப் புறனடை. |
இ-ள்:மேற்சொல்லப்பட்ட பாசறைக்கட் புறப்பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது என்றவாறு. |
பொருந்துவது என்றதனாற் கூட்டமென்று கொள்க. அவராவார் தாதியருங் கணிகையரும். |
நச். |
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது. |
இ-ள் : புறத்தோர் ஆங்கண்-அடியோரும் வினைவலபாங்கினோருமாகிய அகப்புறத் தலைவருடைய பாசறையிடத்தாயில்; புரைவது என்ப-அவரைப் பெண்ணொடு புணர்த்துப் புலனெறி வழக்கஞ் செய்தல் பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
இப்பாசறைப் பிரிவை வரையறுப்பவே ஏனைப் பிரிவுகளுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோர்க்கு வரைவின்றாயிற்று. |
1. புரைவதென்ப-நச். பாடம். புறத்தோர் அகனைந்திணைக்குப் புறம்பானோர் என்பர் நச். |