|
முள்ளுடைத்து என்றல்; ஊறு என்பது - இடையூறு’ புலியானும்
யானையானுஞ் சூரரமகளிரானும் கள்ளரானும்
எண்கானும் இடையூறுடைத்து
என்றல்; அச்சம் என்பது - அஞ்சப்படுவன கண்டவிடத்து
மனக்குறிப்பின்றியே
அஞ்சுவது, அச்சமும் இவன்கணில்லை யென்றவாறு;
தன்னையழிதலும் என்பது - தன்கண் ஒருதுன்பம்
வந்தவிடத்து
எனக்காகாததோ ரொழுக்கம் எடுத்துக்கொண்டேன் எனத் தன்னை
நெஞ்சினால் நோதலும்
என்றவாறு; கிழவோற்கு இல்லை யென்பது -
இனையன தலைமகற்கு இல்லை என்றவாறு.
அஃதேயெனின், இவற்கு அவையுளவாய்வைத்து நினையாமையின்
இல்லையோ? இல்லையாயே இல்லையோ?
எனின், உளவேயெனின்
நினையானாயினும் வந்து நிகழும். உலகத்து உயிர்வாழ் சாதிகளெல்லாம்
தம்
சாக்காடு நினைத்துச் செல்கின்றவுளவே? இல்லையன்றே; இல்லையெனினும்
அவை வந்தே நிகழ்ந்துவிடும்.
அதுபோல இவன் நினையானாயினும்
உளவாயின் நிகழவேண்டும்; இனி, இல்லையாயே யில்லையெனின்,
இல்லதனை இல்லையென வேண்டுவதில்லை; என்னை, ஆகாயப்பூ இல்லை
என வேண்டா, அதுபோல என்பது;
என்றார்க்கு இல்லதனையே
இல்லையென்றார், இவன் உலகத்துத் தலைமகனல்லன், புலவரால்
நாட்டப்பட்ட
தலைமகன் என்பதனை யாப்புறுத்தற்கு, உலகத்துத்
தலைமகனாயின் இவையெல்லாம் இல்லாமையில்லை
யென்பது.
கிழவோற்கில்லை யெனவே கிழத்திக்கும் தோழிக்கும் அவையுள என்பது
பெற்றாம்.
அவர் ஆறு இன்னாது என்றும் இடையூறுகள் உள என்றும்
அவற்றிற்கு அஞ்சுதலும், நம்பெருமான் தனக்குத்
தகாத இளிவரவொழுக்கம்
ஒழுகுதற்குக் காரணமாயினேமாகாதே யென்று தம்மையழிதலும் உடையர்
என்றவாறு.
அஃதேயெனின், வயிரமுடையான் ஒருவன், வயிரம் உளுவெறியும்
என்று அஞ்சான், அதுபோல இவரும்
அஞ்சாது விடற்பாலார் பிற, அவற்கு
அவையின்மையால் எனின், அதுவன்று; பெண்மை யென்பது
ஒருபொருளைப்
பட்டாங்கு அறியாமையாகலான், அவை அவற்கு இல்லையேனும் உளவாகக்
கருதுப என்பது.
அஃதேயெனின், மேல் இவனைப் பொருவிறந்தான் என்று
போதரப்பட்டதன்றே? பட்டமையான் அச்சமும்
தன்னையழிதலும்
இல்லையெனக் கொள்ளாமோ? மனத்தான் வரும் நோயெல்லாம்
உணர்வின்மையான்
வரும் என்பது கடா; அதற்கு விடை, இவன்
ஞானத்தையும் ஒழுக்கத்தையும் விதி இழுக்கினமையாற்
சிற்றறிவினார்
தன்மை உண்மையான் உளகொல்லோ என்று கருதின் அவை யில்லை
யென்பது போதரச்
சொல்லப்பட்டது.
(31)
|