20இறையனார் அகப்பொருள்

      செய்தி - தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், குன்றம் ஆடுதலும்,
தினைக்கிளி கடிதலும்;

     
யாழ் - குறிஞ்சியாழ்.

‘பிறவும்’ என்றதனால்,

      தலைமகன் பெயர் - சிலம்பன், வெற்பன், பொருப்பன்;

      தலைமகள் பெயர் - கொடிச்சி, குறத்தி;

      நீர் - அருவிநீரும், சுனைநீரும்;
      ஊர் - சிறுகுடியும், குறிச்சியும்;
      பூ - குறிஞ்சியும், காந்தளும், வேங்கையும், சுனைக்குவளையும்;
      மக்கள் பெயர் - குறவர், இறவுளர், குன்றவர் எனப்படும்.
நெய்தற்குத்,
    
தெய்வம் - வருணன்;
     உணா - மீன்விலைப்பொருளும், உப்புவிலைப்பொருளும்;
     மா - சுறாவும், முதலையும்;
     மரம் - புன்னையும், ஞாழலும், கண்டலும்;
     புள் - அன்னமும், அன்றிலும், மகன்றிலும்;

     பறை - மீன்கோட் பறையும், நாவாய்ப் பறையும்;

     செய்தி - மீன்விற்றலும், உப்புவிற்றலும், அவை படுத்தலும்;
     யாழ் - விளரியாழ்.

இனிப் ‘பிறவும்’ என்றதனால்,
   
 தலைமகன் பெயர் - துறைவன், கொண்கன், சேர்ப்பன்;
     தலைமகள் பெயர் - நுளைச்சி, பரத்தி;
     நீர் - மணற்கிணறும், உவர்க்கழியும்;
     பூ - வெள்ளிதழ்க் கைதையும், நெய்தலும்;

     ஊர் - கலமேறு பட்டினமும், சிறுகுடியும், பாக்கமும்;


மக்கள் பெயர் - பரதர், பாத்தியர், நுளையர், நுளைச்சியர் எனப்படும்.