செய்தி - தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும்,
குன்றம் ஆடுதலும்,
தினைக்கிளி கடிதலும்;
யாழ் - குறிஞ்சியாழ்.
‘பிறவும்’ என்றதனால்,
தலைமகன் பெயர் - சிலம்பன், வெற்பன், பொருப்பன்;
தலைமகள் பெயர் - கொடிச்சி, குறத்தி;
நீர் - அருவிநீரும், சுனைநீரும்;
ஊர் - சிறுகுடியும், குறிச்சியும்;
பூ - குறிஞ்சியும், காந்தளும், வேங்கையும், சுனைக்குவளையும்;
மக்கள் பெயர் - குறவர், இறவுளர், குன்றவர் எனப்படும்.
நெய்தற்குத்,
தெய்வம் - வருணன்;
உணா - மீன்விலைப்பொருளும், உப்புவிலைப்பொருளும்;
மா - சுறாவும், முதலையும்;
மரம் - புன்னையும், ஞாழலும், கண்டலும்;
புள் - அன்னமும், அன்றிலும், மகன்றிலும்;
பறை - மீன்கோட் பறையும், நாவாய்ப் பறையும்;
செய்தி - மீன்விற்றலும், உப்புவிற்றலும், அவை படுத்தலும்;
யாழ் - விளரியாழ்.
இனிப் ‘பிறவும்’ என்றதனால்,
தலைமகன் பெயர் - துறைவன், கொண்கன், சேர்ப்பன்;
தலைமகள் பெயர் - நுளைச்சி, பரத்தி;
நீர் - மணற்கிணறும், உவர்க்கழியும்;
பூ - வெள்ளிதழ்க் கைதையும், நெய்தலும்;
ஊர் - கலமேறு பட்டினமும், சிறுகுடியும், பாக்கமும்;
மக்கள் பெயர் - பரதர், பாத்தியர், நுளையர், நுளைச்சியர் எனப்படும்.
|