கேட்டான், தலைமகன் கூறத் தோழி கேட்டாள் என்று இவ்வகை அறிந்து
உரைப்பது.
இடம் என்பது, அவ்வாறு ஒருவர் கூற ஒருவர் கேட்குமிடம்
என்றறிவது; அவை, தன்மை முன்னிலை
படர்க்கை என்பன. அவற்றுள், யான்
என்பது தன்மை, நீ யென்பது முன்னிலை, அவன் என்பது
படர்க்கை.
அவற்றுள் இன்னது பற்றி வந்ததென்று அறிவது.
காலம்
என்பது, இறந்தகாலம் நி்கழ்காலம் எதிர்காலம் என
மூன்றுவகைப்படும்; அவற்றுள்,
உண்டான் என்பது இறந்தகாலம்,
உண்ணாநின்றான் என்பது நிகழ்காலம், உண்பான் என்பது எதிர்காலம்.
இவற்றுள் இன்னதுபற்றி வந்ததென்று அறிவது.
எச்சம்
என்பது ஒழிவு, அஃது இரண்டு வகைப்படும்; சொல்லெச்சமும்
குறிப்பெச்சமும் என.
அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும்.
மெய்ப்பாடு
என்பது எட்டுவகைப்படும்: அவை - நகை, அழுகை,
இளிவரல், மருட்கை, உவகை, அச்சம்,
பெருமிதம் வெகுளி என இவை;
அவற்றுள் இன்னதோர் மெய்ப்பாடு வந்ததென்று அறிவது.
பயன் என்பது, இது சொல்ல இன்னது பயக்கும் என்று அறிவது.
கோள் என்பது, ஒரு பாட்டினகத்துப் பொருள்கொண்டு நிற்கும் நிலை;
அஃது ஐந்துவகைப்படும் -
விற்பூட்டு, விதலையாப்பு, பாசிநீக்கு,
கொண்டுகூட்டு, ஒருசிறைநிலை என்றவற்றுள் இன்னதோர்
பொருள்கொண்டு
நின்றது இப் பாட்டு என்று அறிவது. அவற்றுள்,
விற்பூட்டுப் பொருள்கோள் வருமாறு:
‘வருவர் வயங்கிழாய் வாட்டாற் றெதிர்நின்று வாள்மலைந்த
உருவ மணிநெடுந் தேர்மன்னர் வீய ஒளிதருமேல்
புருவ முரிவித்த தென்னவன் பொன்னங் கழலிறைஞ்சாச்
செருவெம் படைமன்னர் போலவெங் கானகஞ் சென்றவரே.’ (315)
இனி, விதலையாப்பு வருமாறு:
‘பண்தான் அனையசொல் லாய்பரி விட்டுப் பறந்தலைவாய்
விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்த
வண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவன
கண்டார் கடக்கிற்ப ரோகட வாரன்பர் கானகமே.’ (316)
|