இறையனார் அகப்பொருள் - களவு 21
 

      முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
     சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.’           (அகத்-5)
     ‘காரு மாலையு முல்லை.’                        (அகத் -6)
     ‘குறிஞ்சி
     கூதிர் யாமம் என்மனார் புலவர்.’                 (அகத் -7)
     ‘பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.’         (அகத் -8)
     ‘வைகுறு விடியல் மருதம்.’                       (அகத் -9)
     ‘எற்பாடு
     நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்’             (அகத -10)
     ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
     முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.’         அகத் -11)
     ‘பின்பனி தானும் உரித்தென மொழிப’            (அகத் - 12)

     
மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது சொல்லிற்றின்மையின்,
அறுவகை இருதுவும் உரிய எனக் கொள்க; இவை முதல்.

                  
ஐந்திணைக் கருப்பொருள்

       இனிக், கரு என்பது தெய்வமும் உணாவும் மாவும் மரமும் புள்ளும்
பறையும் செய்தியும் யாழும் முதலாக உடையது;

   என்னை,
      
 ‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
        செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ1
        அவ்வகை பிறவுங் கருலென மொழிப’ (அகத் - 20)
என்றாராகலின். அவை அம்முறையானே சொல்லுதும்.
குறிஞ்சிக்குத்,

  
தெய்வம் - முருகவேள்;
  
உணா - ஐவன நெல்லும், திணையும்;
  
மா - புலியும், பன்றியும், யானையும்;
  
மரம் - அகிலும், ஆரமும், திமிசும், தேக்கும், வேங்கையும்;
  
புள் - கிளியும், மயிலும்;
  
பறை - வெறியாட்டுப்பறையும், தொண்டகப்பறையும், குரவைப்பறையும்,

    
 (பாடம்) 1. தொகைஇய.