இறையனார் அகப்பொருள் - களவு 3
 

நூற்பெயரும், யாப்பும், நுதலிய பொருளும், கேட்போரும், பயனும் என
இவை.

     என்னை,
          ‘
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
          நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
          கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
          வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே’
என்றாராகலின்.

      இவற்றொடு காலமும் களனும் காரணமும் கூட்டிப் பதினொன்று
என்பாரும் உளர்;

      என்னை,
            ‘
காலங் களனே காரணம் என்றிம்
           மூவகை யேற்றி மொழிநரும் உளரே’
என்றாராகலின்.

      
ஆக்கியோன் பெயர் என்பது - நூல் செய்த ஆசிரியன் பெயர்
என்றவாறு; இந் நூல் செய்தார் யாரோ எனின், மால்வரை புரையும்
மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக்
குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள் என்பது.


      
வழி என்பது - இந்நூல் இன்னதன் வழித்து என்பது. இது,
வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற்1 செய்யப்பட்டதாகலான்
வழிநூல் என்று சொல்லப்படாது, முதனூல் எனப்படும் என்பது.

     
எல்லை என்பது - இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என்பது.
இந்நூல் எவ்வெல்லையுள் நடக்குமோ எனின், வடக்கு வேங்கடம், தெற்குக்
குமரி, கிழக்கும் மேற்குங் கடல் எல்லையாக நடக்கும் என்பது.

       என்னை,
             ’
வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும்
            வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்
            றந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
            நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்’
எனவும்,
      ‘
வடவேங்கடம் தென்குமரி
      ஆயிடைத்
      தமிழ்கூறு நல்லுலகத்து’

  
(பாடம்) 1. செய்யப்பட்டமையான்.