80இறையனார் அகப்பொருள்

   ‘நண்ணிய போர்மன்னர் வான்புக நட்டாற் றமர்விளைத்த
   மண்ணிவர் செங்கோல் வரோதயன் வையைநன் னாடனையாய்
   கண்ணியன் தண்ணந் தழையன் கழலன் கடுஞ்சிலையன்
   எண்ணிய தியாதுகொல் லோவக லானிவ் விரும்புனமே
’      (89)

   ‘
பன்னிய தீந்தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிவென்ற
   மன்னிய சீர்மன்னன் கொல்லிநம் வார்புனங் கட்டழித்துத்
   தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன்தந்த
   பொன்னியல் பூண்மங்கை வாடுப வோமற்றிப் பூந்தழையே
’   (90)

   ‘அரைதரு மேகலை அன்னமன் னாயன் றகத்தியன்வாய்
   உரைதரு தீந்தமிழ் கேட்டோன் உசிதனொண் பூம்பொதியில்
   வரைதரு வார்புனங் கையக லான்வந்து மாவினவும்
   விரைதரு கண்ணியன் யாவன்கொ லோவோர் விருந்தினே
ன’  (91)

   ‘பொரும்பார் அரசரைப் பூலந்தை வாட்டிய கோன்பொதியில்
   அரும்பார் தழையுங்கொண் டியான் சொன்ன பொய்யைமெய்
                                          யென்றகலான்
   பெரும்பான் மையுமின்று வாரா விடான்வரிற் பேரமர்க்கட்
   சுரும்பார் கருங்குழ லாயறி யேனினிச் சொல்லுவதே
’         (92)

   ‘தெம்மாண் பழிந்துசெந் தீமூழ்கச் சேவூர்ச் செருவினன்று
   வெம்மாப் பணிகொண்ட வேந்தன்தென் னாடன்ன மெல்லியலாய்
   இம்மாந் தழையன் அலங்கலங் கண்ணியன் யாவன்கொல்லோ
   கைம்மா வினாய்வந் தகலான் நமது கடிப்புனமே
’             (93)

    ‘சிலையுடை வானவன் சேவூர் அழியச் செருவடர்த்த
   இலையுடை வேல்நெடு மாறன் கழலிறைஞ் சாதவர்போல்
   நிலையிடு சிந்தைவெந் நோயொடிந் நீள்புனங் கையகலான்
   முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே
.’        (94)

    ‘இலைசூழ்செங் காந்தள் எரிவாய் முகையவிழ்த் தீர்ந்தண்வாடை
   கொலைவேல் நெடுங்கண் கொடிச்சி கதுப்புளருங் குன்றநாடன்
   உலைவுடை 2வெந்நோ யுழக்குமால் அந்தோ
   முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே
.’        (95)


என இவ்வகை கூறக் கேட்டு, ‘நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்’ என்ற
எம்பெருமான் வந்து இவளை இரந்துபின்னின்றமையான் இறந்துபட்டிலன்
என ஏமாப்பாளாவது.

      இனி, வலிதாகச் சொல்லிக் குறைநயப்பிக்குமாறு: ‘இங்கு வந்து
ஒழுகாநின்றான் ஒரு தோன்றல் உளன், அவன் என்னினாயதொரு
குறையுடையான்போலும், ஒருவரான் ஒரு குறை கொள்ளுந் தன்மையனும்
அல்லன், தான் பிறர்க்கு ஒரு குறை

 
1. தொல், களவியல்: 23. (பாடம்) 2. நோயொடுழக்குமா.