114புணரியல்

இது மேற்கூறும் புணர்ச்சிகளெல்லாம்  இருமொழிப்  புணர்ச்சி  யல்லது
இல்லையென்பதூஉம்   அஃது    எழுத்துவகையான்  நான்காமென்பதூஉம்
உணர்த்துகின்றது.
 

இதன் பொருள் : உயிரிறு  சொன்முன்   உயிர்வரு  வழியும் - உயிர்
தனக்கு  ஈறாக  இறுஞ்  சொல்லின்முன்  உயிர்  முதலாகிய  மொழிவரும்
இடமும்,  உயிரிறு  சொன்முன்  மெய்வருவழியும் - உயிர்  தனக்கு  ஈறாக
இறுஞ் சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழிவரும் இடமும், மெய்யிறு
சொன்முன்உயிர் வரு  வழியும் - மெய்  தனக்கு  ஈறாக  இறுஞ்சொல்லின்
முன்னர் உயிர் முதலாகிய  மொழிவரும்  இடமும்,  மெய்யிறு  சொன்முன்
மெய்வரு  வழியும் - மெய்  தனக்கு  ஈறாக  இறுஞ்  சொல்லின்  முன்னர்
மெய்முதலாகிய மொழிவரும்  இடமும், என்று  புணர்நிலைச்சுட்டு - என்று
சொல்லப்பட்ட  ஒன்றினோடொன்று கூடும்  நிலைமையாகிய கருத்தின்கண்,
இவ்வென  அறியக்   கிளக்குங்   காலை -  அவற்றை   இத்துணையென
வரையறையை எல்லாரும் அறிய யாங்  கூறுங்காலத்து,  நிறுத்த  சொல்லே
குறித்துவரு  கிளவியென்று  ஆயீரியல - முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லும்
அதனை   முடித்தலைக்குறித்து   வருஞ்சொல்லும்  என்று  சொல்லப்பட்ட
அவ்விரண்டு இயல்பினையுடைய என்றவாறு.
 

எனவே,    நான்குவகையானுங்     கூடுங்கால்     இருமொழியல்லது
 புணர்ச்சியின்று என்றாராயிற்று.
 

உதாரணம் : ஆவுண்டு   ஆவலிது   ஆலிலை   ஆல்வீழ்ந்தது என
முறையே காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழிச் சாரியையும் உருபும்
நிலைமொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்த சொல்லென்றும்
முடிக்குஞ்சொல்லைக்குறித்து  வருகிளவி  யென்றும்  கூறினார்.  இதனானே
நிலைமொழியும்  வருமொழியுங்    கூறினார்.   1முன்னர்  'மெய்யே யுயிர்'
(எழு - 103) என்றது ஒருமொழிக்கு, இது இருமொழிக்கென்று உணர்க.
 

(5)

1. முன்னர் என்றது, நூன்மரபு 18 - ம் சூத்திரத்தை.