உதாரணம் : அவற்றை அவற்றொடு, இவற்றை இவற்றொடு, உவற்றை உவற்றொடு என ஒட்டுக. (11) |
184. | ஏனை வகர மின்னொடு சிவணும். |
|
இஃது எய்தாத தெய்துவித்தது; பெயர்க்கேயன்றி உரிச்சொல் வகரத்திற்கு முடிபு கூறுதலின். |
இதன் பொருள்: ஏனை வகரம் இன்னொடு சிவணும் - ஒழிந்த உரிச்சொல் வகரம் இன்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு. |
1தெவ்வினை தெவ்வினொடு என ஒட்டுக. இஃது உரிச் சொல்லாயினும் 2படுத்தலோசையாற் பெயராயிற்று. |
(12) |
185. | மஃகான் புள்ளிமு னத்தே சாரியை. இது மகர ஈறு புணருமாறு கூறுகின்றது. |
|
இதன் பொருள்: மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை - மகரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் வருஞ் சாரியை அத்துச் சாரியை என்றவாறு. |
உதாரணம் : மரத்தை மரத்தொடு நுகத்தை நுகத்தொடு என ஒட்டுக. 'அத்தே வற்றே' (எழு - 133) 'அத்தி னகரம்' (எழு - 125) என்பனவற்றான் முடிக்க. |
(13) |
186. | இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. |
|
இது மகர ஈற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. |
இதன் பொருள்: இன்னிடை வரூஉம் மொழியுமாருள - மகர ஈற்றுச் சொற்களுள் அத்தேயன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள என்றவாறு. |
மார் அசை. |
|
1. தெவ் - பகை ; உரிச்சொல். தெவ்வுப் பகையாகும் என்பது உரியியல் 18 - ஞ் சூத்திரம். |
2. படுத்தலோசையாற் பெயராயிற்று என்றது பகைவனையுணர்த்தலின். |