உதாரணம் : உருமினை உருமினொடு, திருமினை திருமினொடு என வொட்டுக. |
14 |
187. | நும்மெ னிறுதி யியற்கை யாகும். |
|
இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. |
இதன் பொருள் :நும்மென் இறுதி இயற்கையாகும் - நும்மென்னும் மகர ஈறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும் என்றவாறு. |
உதாரணம் : நும்மை, நும்மொடு, நுமக்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரும். |
நுமக்கு நுமது என்பனவற்றிற்கு 'ஆற னுருபினு நான்கனுருபினும்' (எழு - 161) 'நும்மெனிறுதியு மந்நிலை' (எழு - 162) 'வல்லெழுத்து முதலிய' (எழு - 114) 'ஆற னுருபி னகரக் கிளவி' (எழு - 115) என்பன கொணர்ந்து முடிக்க. |
நுங்கணென்பதற்கு 1மேலைச்சூத்திரத்து 'மெய்' என்றதனான் மகரவொற்றுக்கெடுத்து 'வல்லெழுத்து முதலிய' என்பதனான் மெல்லொற்றுக் கொடுக்க. இயற்கையென்றார் சாரியை பெறாமை கருதி. |
(15) |
188. | தாநா மென்னு மகர விறுதியும் யாமெ னிறுதியு மதனோ ரன்ன ஆஎ ஆகும் யாமெ னிறுதி யாவயின் யகரமெய் கெடுதல் வேண்டு மேனை யிரண்டு நெடுமுதல் குறுகும். |
|
இது மகர ஈற்றில் முற்கூறிய முடிபு ஒவ்வா தனவற்றிற்கு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனோரன்ன - தாம் நாமென்று கூறப்படும் மகர ஈறும் யாமென்னும் மகர ஈறும் நும்மென்னும் மகர ஈறுபோல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய, |
|
1. மேலைச் சூத்திரமென்றது வருஞ் சூத்திரத்தை. |