உதாரணம் :அதங்கோடு விளங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
இது 'கசதப முதலிய' (எழு - 143) என்பதனான் முடியும். |
(15) |
218. | மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. |
|
இஃது அகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. |
இதன் பொருள் : மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை - அகர ஈற்று மக என்னும் பெயர்ச் சொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருஞ்சாரியை என்றவாறு. |
உதாரணம் :மகவின்கை செவி தலை புறம் என வரும். சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக்கண்ணுஞ் செல்லுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாகலின் மகவின் ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என ஒட்டுக. |
மேல் அவண் என்றதனான் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. |
(16) |
219. | அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. |
|
இஃது ஈற்று வல்லெழுத்தும் அத்தும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
இதன்பொருள்: அவண் - முற்கூறிய மகவிடத்து, அத்துவரினும் வரைநிலை இன்று - இன்னேயன்றி அத்துச் சாரியையும் ஈற்று வல்லெழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு. |
உதாரணம் :மகத்துக் கை செவி தலை புறம் என வரும். |
அவண் என்றதனால் மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகவின்கை என மேல்இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், விளவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. நிலையென்றதனால் மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. |
(17) |