220. | பலவற் றிறுதி யுருபிய னிலையும். |
|
இஃது ஈற்று வல்லெழுத்தும் வற்றும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : பலவற்றிறுதி - பல்ல பல சில உள்ள இல்ல என்னும் பலவற்றை யுணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல் நிலையும் - உருபியற்கண் வற்றுப் பெற்றுப் புணர்ந்தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக் கண்ணும் வற்றுப்பெற்றுப் புணரும் என்றவாறு. |
ஈற்று வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க. |
உதாரணம் : பல்லவற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவற்றுக்கோடு உள்ளவற்றுக்கோடு இல்லவற்றுக்கோடு, செதிள் தோல் பூ என ஒட்டுக. உருபு விரிந்துழி நிற்குமாறு போலன்றி அவ்வுருபு தொக்கு 1அதன்பொருள் நின்று புணருங்கால் வேறுபாடு உடைமையின் அவ்வேறுபாடுகள் ஈண்டு ஓதினார் இத்துணையு மென்று உணர்க. |
(18) |
221. | ஆகார விறுதி யகர வியற்றே. |
|
இஃது ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்:ஆகார இறுதி அகர இயற்று - ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் என்றவாறு. |
உதாரணம் : மூங்காக்கடிது தாராக்கடிது சிறிது தீது பெரிது என ஒட்டுக. |
(19) |
222. | செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியு மவ்விய றிரியா தென்மனார் புலவர். |
|
இஃது ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்:செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யா வென்னும் வினையெச்சமாகிய சொல்லும் உம்மையாற் பெயரெச்ச மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது |
|
1. அதன் பொருள் - உருபின் பொருள். பொருள் என்றது வருமொழியை வருமொழிபற்றியே பொருளுணரப்படும். |