உதாரணம் :நிலாஅத்துக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். 1நிலைமொழித் தொழிலை விலக்குமாதலின் அத்துவகுப்ப அகரம் வீழ்ந்தது. இதற்கு ஏழனுருபு விரிக்க. நிலாஅக்கதிர் என்பது 'வேற்றுமைக்கண்ணும்' (எழு - 225) என்பதனான் ஈற்று வல்லெழுத்துப்பெற்றது. நிலாஅமுற்றமென்பது 'ஒட்டுதற்கொழுகிய வழக்கு' அன்மையின் அத்துப் பெறாதாயிற்று. ஈண்டு வருமொழி வரையாது கூறினமையின் நிலாஅத்து ஞான்றான் என இயல்பு கணத்துக்கண்ணும் ஏற்பன கொள்க. |
(26) |
229. | யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவு மாமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே. |
|
இது வருமொழி வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. |
இதன் பொருள் : யாமரக் கிளவியும் - யாவென்னும் மரத்தை உணரநின்ற சொல்லும், பிடாவும் - பிடாவென்னுஞ் சொல்லும், தளாவும் - தளாவென்னுஞ் சொல்லும், ஆம் முப்பெயரும் மெல்லெழுத்து மிகும் - ஆகிய மூன்று பெயரும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : யாஅங்கோடு பிடாஅங்கோடு தளாஅங்கோடு செதிள் தோல் பூ என வரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்து வகுப்பவே வல்லெழுத்து விலக்கிற்றாம். இதற்கு விலக்காமையின் அகரம் பெற்றது. |
(27) |
230. | வல்லெழுத்து மிகினு மான மில்லை. |
|
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது, அகரத்தோடு மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறுமென்றலின். |
இதன் பொருள்: வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - முற்கூறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை என்றவாறு. |
|
1. இச் சூத்திரம் நிலைமொழித் தொழிலை விலக்கும். நிலைமொழித் தொழிலை விலக்கல் 24-ம் சூத்திரத்து அகரப்பேற்றை விலக்கல். |