உயிர்மயங்கியல்213

யிடன் உடைத்து - அகரத்தோடு கூடிநிற்கும் இடனும் உடைத்து என்றவாறு.
 

இடனுடைத்  தென்றவதனால்   வன்கண  மொழிந்த   கணத்து   இம்
முடிபெனக் கொள்க.
 

உதாரணம் 'ஆனநெய்  தெளித்து  நான  நீவி','ஆனமணி கறங்குங்
கானத்  தாங்கண்'   என   வரும்,  அகரமொடும்   என்ற   உம்மையால்
அகரமின்றி  வருதலே  பெரும்பான்மை.  ஆனெய்  தெளித்து  ஆன்மணி
ஆன்வால் என வரும்.
 

(30)
 

233.

ஆன்முன் வரூஉ மீகார பகரந்
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே.

 

இஃது ஆனென்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் ஆன்முன் வரூஉம்  ஈகார பகரம் - ஆனென்னுஞ்
சொன்முன்னர் வருமொழியாய்  வருகின்ற  ஈகாரத்தோடு கூடிய பகரமாகிய
மொழி,   தான்  மிகத்  1தோன்றி  -  அப் பகரமாகிய  தான் மிக்கு நிற்ப
நிலைமொழி  னகரத்திற்குக்  கேடுதோன்றி, குறுகலும்  உரித்து  -  ஈகாரம்
இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து என்றவாறு.
  

உதாரணம் :ஆப்பி என வரும்.
 

உம்மை எதிர்மறை யாகலான் ஆன்பீ என்றுமாம்.
 

(31)
 

234.

குறியத னிறுதிச் சினைகெட வுகர
மறிய வருதல் செய்யுளு ளுரித்தே.

 

இஃது ஆகார ஈற்றுட் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் குறியதன்  இறுதிச்  சினைகெட  - குற்றெழுத்தின்
இறுதிக்கண்   நின்ற    ஆகாரத்தினது   இரண்டு   மாத்திரையில்   ஒரு
மாத்திரை கெட்டு அஃது அகரமாய் நிற்ப, உகரம் அறியவருதல் செய்யுளுள்
உரித்து  -  ஆண்டு  உகரம்  புலப்பட  வருதல்  செய்யுளிடத்து  உரித்து
என்றவாறு.


1. தோன்றி என்பதை இலேசாகக் கொண்டு னகரத்திற்குக் கேடு கூறுவர்
உரையாசிரியர். அதுவே பொருத்தமாம்.